டாப்ஸ்லிப் யானைகள் முகாமில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் - யானைகளுக்கு சிறப்பு பூஜை

பொள்ளாச்சி அருகே டாப்சிலிப் வளர்ப்பு யானைகள் முகாமில், விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அப்போது யானைகளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.


கோவை: விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு யானைகளுக்கும் சிறப்பு பூஜைகள் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து, யானைகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டு பழ வகைகள் உணவாக வழங்கப்பட்டன.

பொள்ளாச்சி அருகே டாப்சிலிப் வளர்ப்பு யானைகள் முகாமில், விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட, உலாந்தி வனச்சகரம் டாப்சிலிப் அருகே, கோழிகமுத்தி முகாமில், 26 வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்படுகின்றன.

இந்த முகாமில், விநாயகர் சதுர்த்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது.புலிகள் காப்பக கள இயக்குனர் ராமசுப்ரமணியம், துணை இயக்குனர் பார்கவதேஜா முன்னிலை வகித்தனர். உதவி வன பாதுகாவலர் செல்வம், வனச்சரகர் சுந்தரவேல் மற்றும் வனத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, அங்குள்ள விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கோவிலில் வரிசையாக யானைகள் நிறுத்தப்பட்டன. அதன்பின், விநாயகப்பெருமானுக்கும், யானைகளுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து, யானைகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டதுடன், பழ வகைகள் உணவாக வழங்கப்பட்டன.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...