அதிமுகவை யாரும் அழிக்க முடியாது - உடுமலையில் வைகைச் செல்வன் சூளுரை

உடுமலை சட்டமன்ற தொகுதி சார்பில் பெதப்பம்பட்டியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அறிவுறுத்தல் படி பேரறிஞர் அண்ணாவின் 115 வது பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.



திருப்பூர்: அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட கட்டிடங்கள் நலத்திட்டங்களை தற்பொழுது திமுகவினர் தாங்காள் கொண்டு வந்ததை போல விளம்பரம் தேடிக் கொள்கிறார்கள் என வைகைச் செல்வன் குற்றம்சாட்டியுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்ற தொகுதி சார்பில் பெதப்பம்பட்டியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அறிவுறுத்தல் படி பேரறிஞர் அண்ணாவின் 115 வது பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

குடிமங்கலம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்பர்ராஜன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசியாதவது,



உடுமலை சட்டமன்ற தொகுதியில் சுமார் 400 கோடி அளவில் மக்களுக்கு நலத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட கட்டிடங்கள் நலத்திட்டங்களை தற்பொழுது திமுகவினர் தாங்காள் கொண்டு வந்ததை போல விளம்பரம் தேடிக் கொள்கின்றனர்.



வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும் என்று அவர் பேசினார். இதேபோல முன்னாள் அமைச்சர் இலக்கிய அணி செயலாளருமான வைகைச் செல்வன் சிறப்புரையாற்றினார்.



கடந்த சில வருடங்களுக்கு முன்பு அதிமுக அம்மையார் மறைவிற்கு பின் அழிந்து போகும் என பேசி வந்தவர்கள் தற்பொழுது வாயடைத்து உள்ளனர். காரணம் இந்தியாவிலேயே கிளைச் செயலாளர் முதல்வர் ஆகும் ஒரே கட்சி அதிமுக தான்.



திமுக அரசு வாரிசு அரசியலை நோக்கி பயணித்துக் கொண்டுள்ளது. மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். இனிவரும் காலங்களில் திமுகவிற்கு தகுந்த பாடம் புகப்பட்டப்படும் என்றார்.

இந்தக்கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் முருகேசன், பிரனேஷ், உடுமலை நகர செயலாளர் ஹக்கீம், அமைப்பு சாரா ஓட்டுனர் அணி மாவட்ட செயலாளர் எஸ்.எம்.நாகராஜ், நகர ஒன்றிய பேரூராட்சி மாவட்ட சார்பணி நிர்வாகிகள் உட்பட கலந்து கொண்டனர்.

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...