நிலத்திற்கு இழப்பீடு கேட்டு 29வது நாளாக தாராபுரத்தில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்..!!

தாராபுரம் நல்லதங்காள் ஓடை நீர் தேக்க அணைக்கு நிலம் கொடுத்த விவசாயிகள் முழு இழப்பீடு தொகை கேட்டு 29-ஆவது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.



திருப்பூர்: தமிழர் முன்னணி இயக்கப் பொதுச் செயலாளர் இமயம் சரவணன் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு வந்து விவசாயிகளை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த பொன்னிவாடி கிராமத்தில் உள்ள நல்லதங்காள் ஓடை நீர்த்த காணிக்கை கட்டுமான பணிகளுக்காக விவசாயிகளிடமிருந்து 750 ஏக்கர் நிலம் பொதுப்பணித்துறை அதிகாரிகளால் கடந்த 1997 ஆம் ஆண்டு கையகப்படுத்தப்பட்டது. 2000 ஆம் ஆண்டு அணை கட்டுமான பணிகளை தொடங்கினர்.

அப்போது விவசாயிகளிடம் அணை கட்டுவதற்காக கையகப்படுத்தப்பட்ட விவசாய விளை நிலங்களுக்கு அதிகபட்ச இழப்பீடு தொகை வழங்குவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் விவசாயிகளிடம் தெரிவித்து நிலத்தைப் பெற்றுக் கொண்டனர்.

ஆனால் விவசாயிகள் கூறியவாறு விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு தொகை வழங்கவில்லை. இழப்பீட்டுத் தொகை கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 2017 ஆம் ஆண்டு நீதிமன்ற உத்தரையின்படி இழப்பீட்டுத் தொகை வட்டியுடன் சேர்த்து கொடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் 24 ஆண்டுகள் ஆகியும் விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கவில்லை.



இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் பலர் இழப்பீட்டுத் தொகை கிடைக்காமலே இறந்துவிட்டனர். இருப்பினும் தற்போது உள்ள 150 விவசாயிகள் கோனேரிப்பட்டி பகுதியில் கடந்த 29 வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



நேற்று 29-வது நாள் தொடர் காத்திருக்கு போராட்டத்தில் விவசாயிகளுடன் தமிழர் முன்னணி இயக்க பொதுச்செயலாளர் இமயம் சரவணன் விவசாயிகளுடன் கலந்து கொண்டு உரையாற்றிய பின்னர் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிப்பதாக செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...