தாராபுரத்தில் மின்கம்பத்தில் லாரி மோதி விபத்து - நள்ளிரவு வரை மின்சாரம் நிறுத்தம்!

தாராபுரம் புறவழிச்சாலையில் நேற்றிரவு அதிக வேகத்துடன் வந்த சரக்கு லாரி கட்டுப்பாட்டை இழந்து உடுமலை சாலை சிக்னல் அருகேயுள்ள பெட்ரோல் பங்க் எதிரில் உள்ள மின் கம்பத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதால், அப்பகுதியில் நள்ளிரவு 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்பட்டதால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.


திருப்பூர்: தாராபுரம் அருகே சாலையோர மின் கம்பத்தில் சரக்கு லாரி மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் புறவழிச்சாலையில் நேற்று இரவு அதிக வேகத்துடன் வந்த சரக்கு லாரி கட்டுப்பாட்டை இழந்து உடுமலை சாலை சிக்னல் அருகேயுள்ள பெட்ரோல் பங்க் எதிரில் உள்ள மின் கம்பத்தில் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது.

இதனால் மின்சார ஒயர்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன. மேலும் கம்பம் உடைந்து விழும் நிலை ஏற்பட்டது.



பெரும் மின்விபத்தை தவிர்க்க மின்சார வாரிய ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உடனடியாக அப்பகுதியில் மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்பட்டது.

இச்சம்பவம் காரணமாக நேற்று நள்ளிரவு 2 மணி வரை தாராபுரம் நகரம் முழுவதும் மின்தடை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள், சிறு குழந்தைகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் ஓட்டுனரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...