தேசிய ஒற்றுமைக்கு எதிராக பேசும் நடிகர் கமலஹாசன் மீது நடவடிக்கை கோரி இந்து மகா சபையினர் ஆட்சியரிடம் மனு

சட்டத்திற்கு  எதிராகவும், தேசிய ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பேசும் நடிகர் கமலஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அனைத்து இந்திய இந்து மகாசபையினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

அம்மனுவில், நடிகர் கமலஹாசன் நேற்று தனியார் தொலைகாட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் சில கருத்துகளை தெரிவித்தார். இதில் கமலஹாசன் தமிழக அரசியல் சட்டத்திற்கு  புறம்பான வகையில் பேசி தவறான விமர்சனங்களை பரப்பி வருவதாகவும், மக்களால் தேர்தெடுக்கபட்ட சட்ட மன்றத்தை கலைத்து மீண்டும் தேர்தலை நடத்த வேண்டும் என பேசியதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.

மேலும், விஸ்வரூபம் திரைப்படத்தை திரையிடவிடாமல் அரசியலில் உள்ள நபர்களால் என்று அவர் கூறியுள்ள கருத்தை ஏற்கமுடியாது எனவும், திரைபடம் தொடர்பாக நடிகர் கமலஹாசன் கூறியுள்ளது யாரோ சிலரின் தூண்டுதலின் பேரில் உள்நோக்கதுடன் பேசி வருவதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து சட்டத்திற்கு எதிராகவும், தேசிய ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பேசும் நடிகர் கமலஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அனைத்து இந்திய இந்து மகாசபையினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Newsletter

கோவை நீதிமன்றங்களுக்கு மே 31 வரை கோடை விடுமுறை - Madras High Court உத்தரவு

கோடை காலத்தை முன்னிட்டு Madras High Court கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு மே 31 வரை விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறை காலத...

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் 95.20 சதவீதம் தேர்ச்சி ; ஈரோடு மாவட்டம் முதலிடம்!

மாநிலத்தில் 3,412 தேர்வு மையங்களில் மார்ச் 2 முதல் மார்ச் 26 வரை தேர்வுகள் நடைபெற்றன. இதில் ஈரோடு மாவட்டம் 98.8 சதவீத தே...

பிளஸ் 2 முடிவுகள் வெளியீடு : கோவை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் களைகட்டியது

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான மகிழ்ச்சியிலும், உயர்கல்வி கனவுகளுடனும் மாணவர்கள் உற்சாகமாக கோவையின் பல்வேறு கல்லூரிகளி...

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...