கோவை குரும்பபாளையத்தில் இயங்கி வரும் பவுண்டரிகளை அகற்ற வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை!

சர்க்கார் சாமகுளம் பேரூராட்சிக்கு உட்பட்ட குரும்பபாளையம் அடுத்த பழனி கிருஷ்ணா கார்டன் பகுதியில் இயங்கி வரும் பவுண்டரிகளால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதால், பவுண்டரிகளை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் பேரூராட்சி செயல் அலுவலரிடம் மனு அளித்துள்ளனர்.


கோவை: குரும்பபாளையம் அடுத்த பழனி கிருஷ்ணா கார்டன் பகுதியில் உள்ள பவுண்டரிகளை அகற்ற வலியுறுத்தி பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

சர்க்கார் சாமகுளம் பேரூராட்சிக்கு உட்பட்ட குரும்பபாளையத்தில் 10-வது வார்டுக்கு உட்பட்ட பழனி கிருஷ்ணா கார்டன் பகுதிக்கு அருகில் 100 மீட்டர் தொலைவிற்குள் குடியிருப்பு பகுதியாக தர வகைப்படுத்தப்பட்ட நிலங்களில் வாடகைக்கு பல பவுண்டரிகள் இயங்கி வருகின்றன.



இந்த பவுண்டரிகளில் இருந்து கரும்புகையும், நச்சுப் புகையும் அதிக அளவு வெளிவந்து அருகில் வசிக்கும் குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல், ஆஸ்துமா, அலர்ஜி மற்றும் நுரையீரல் தொடர்புடைய பல பாதிப்புகளை ஏற்படுத்துகின்றது.



இந்த பவுண்டரிகள் முறையான அனுமதி பெற்று இயங்குகின்றதா? என்ற சந்தேகம் மக்களுக்கு உள்ளது. மேலும் எவ்வித மாசு கட்டுப்பாட்டு நடைமுறைகளும் பின்பற்றப்படுவதாக தெரியவில்லை.

இது குறித்து பல ஆண்டுகளாக மாசு கட்டுப்பாட்டு வாரியம், முதலமைச்சர் தனிப்பிரிவு என மனு அளிக்கப்பட்டும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. மேலும் பேரூராட்சி செயல் அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் வந்து எச்சரித்து சென்ற பிறகும் பவுண்டரிகள் தொடர்ந்து புகையை வெளியேற்றி வருகின்றன.

மேலும் கரிய நிற நுண் துகள்கள் வீடுகளிலும், மரங்களிலும் படிகிறது. எனவே மக்கள் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்கும் இந்த ஆட்சியில் குரும்பபாளையம் பகுதி மக்கள் நச்சுப் புகை மற்றும் மணல் துகள்களை சுவாசிக்கும் அவலத்தில் இருந்து விடுதலை பெற்று சுத்தமான காற்றை சுவாசிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதன்படி, குடியிருப்பு பகுதிக்கு அருகாமையில் விதிகளுக்கு புறம்பாக வாடகைக்கு இயங்கி வருகின்ற அனைத்து பவுண்டரிகளையும் இப்பகுதியில் இருந்து நிரந்தரமாக அப்புறப்படுத்த வழிவகை செய்திட சர்க்கார் சாமக்குளம் பேரூராட்சி செயல் அலுவலரிடம் கடந்த ஆகஸ்டு 31ஆம் தேதி அப்பகுதி மக்கள் மனு கொடுத்தனர்.

அந்த மனுவில், பலமுறை புகார் அளித்தும் நீங்கள் அறிவுறுத்தியும் எதற்கும் கட்டுப்படாமல் தொடர்ந்து இயங்கி பொதுமக்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்துவதோடு முறையான அனுமதி பெறாமல் இயங்கி வரும் பவுண்டரிகளுக்கு விடிவு கட்டாவிட்டால் பேரூராட்சி முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்று ஊர் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...