பிளாஸ்டிக் மறுசுழற்சி தொழிற்சாலைக்கு தடை விதிக்க கோரி ஆட்சியர் அலுவலகத்தில் மனு!

காங்கேயம் அடுத்த சிவன்மலை பகுதியில் பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் அமையக்கூடிய பிளாஸ்டிக் மறுசுழற்சி தொழிற்சாலைக்கு தடை விதிக்க கோரி அப்பகுதி மக்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



திருப்பூர்: காங்கேயம் அடுத்த சிவன்மலை பகுதியில் அமைய உள்ள பிளாஸ்டிக் மறுசுழற்சி தொழிற்சாலைக்கு தடை விதிக்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு அளித்தனர்.



திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வட்டம் சிவன்மலை கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான பிளாஸ்டிக் மறுசுழற்சி தொழிற்சாலை துவங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலை அமையும் பகுதியில் தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் குடியிருப்பு, தோட்டங்கள், அங்கீகரிக்கப்பட்ட வீட்டுமனைகள், கால்நடை மேய்ச்சல் நிலங்கள் ஆகியவை உள்ளது.

எனவே இந்த தொழிற்சாலை அமையும் பட்சத்தில் அங்கிருந்து வரக்கூடிய புகையால் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களுக்கும் கால்நடைகளுக்கும் ஏராளமான நோய் பாதிப்புகள் ஏற்படும் நிலை உள்ளது.



பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் அமையக்கூடிய பிளாஸ்டிக் மறுசுழற்சி தொழிற்சாலையை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மனு அளித்தனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...