திருப்பூரில் சுழற்றி அடித்த சூறைக்காற்று… வடக்கு தாலுக்கா அலுவலகத்தில் 2 மரங்கள் முறிந்து விழுந்ததால் பரபரப்பு..!!

திருப்பூர் குமரன் ரோட்டில் வடக்கு தாலுகா அலுவலக வளாகத்தில் இருந்த இரண்டு மரங்கள் சூறாவளிக்காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் முறிந்து விழுந்தன. நல்வாய்ப்பாக பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.



திருப்பூர்: சுழற்றி சுழற்றி அடித்த சூறைக்காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் அரசு அலுவலகத்தில் இருந்த இரண்டு மரங்கள் பயங்கர சத்தத்துடன் முறிந்து விழுந்ததால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

திருப்பூர் குமரன் ரோட்டில் வடக்கு தாலுகா அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த வளாகத்தில் இ சேவை மையம் கிளைச் சிறை ஆகியவையும் செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தாலுகா அலுவலகம் மற்றும் இ சேவை மையங்களுக்கு தங்கள் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக வந்து செல்வது வழக்கம்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக திருப்பூரில் அவ்வப்போது சூறைக்காற்றுடன் சாரல் மழையும் பெய்து வருகிறது.



திருப்பூர் தாலுக்கு அலுவலகத்தில் நிழல் தரும் வகையில் இருந்த இரண்டு மரங்கள் சூறைக்காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் முறிந்து விழுந்தன. அதிர்ஷ்டவசமாக பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.



இதனால் தாலுக்கா அலுவலகவளாகத்தில் சிறிது பரபரப்பு நிலவியது.

Newsletter

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...