திருப்பூரில் பட்டப்பகலில் காதலி கழுத்து அறுத்து கொலை… தற்கொலைக்கு முயன்ற காதலனிடம் போலீசார் விசாரனை..!

திருப்பூரில் பட்டப்பகலில் காதலியை கழுத்தை அறுத்துக் கொன்றுவிட்டு, காதலனும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மருத்துவமனையில் உள்ள காதலனிடம் போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.



திருப்பூர்: தனியார் மருத்துவமனை பெண் ரிசப்ஷனிஸ்டை கழுத்தை அறுத்து கொன்ற நிகழ்வு பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. போலீசாரின் முழு விசாரனைக்குப்பிறகே காதலியை எதற்காக காதலன் கொன்றான் என்ற விவரம் தெரியவரும்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசியை சேர்ந்தவர் மணிவண்ணன்.



இவரது மகள் சத்யஸ்ரீ. இவர் திருப்பூர் 60 அடி ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் ரிசப்ஷினிஸ்டாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல் வேலைக்கு வந்த சத்தியஸ்ரீ பணியை செய்து கொண்டிருந்தார்.

அப்பொழுது அங்கு வந்த நரேந்திரன் என்ற வாலிபர் அந்த பெண்ணுடன் பேசிக் கொண்டிருந்திருந்தார். திடீரென இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் நரேந்திரன் தன் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சத்யஸ்ரீ கழுத்தை அறுத்துவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.



ரத்த வெள்ளத்தில் விழுந்த சத்யஸ்ரீயை அப்பகுதியினர் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனாலும் அவர் மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். நரேந்திரன் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.



இது குறித்து தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த வடக்கு போலீசார் நரேந்திரனிடம் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...