விபத்தில் மரணமடைந்த ஒப்பந்தத் துப்புரவுப் பணியாளரின் குடும்பத்தினருக்கு மாநகராட்சி ஆணையர் ஆறுதல்


கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன், பணியிலிருந்த போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தில் மரணமடைந்த ஒப்பந்தத் துப்புரவுப் பணியாளர் ரமேஷின் குடும்பத்தினரை இன்று சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.



கோவை மாநகராட்சி, மத்திய மண்டலம், வார்டு 81-ல் ஒப்பந்த துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வந்த எஸ்.ரமேஷ் என்பவர் கடந்த 8.03.2017 அன்று பணியிலிருந்த போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தில் மரணமடைந்தார்.

அவரின் குடும்பத்தினரை இன்று கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

மேலும், ஒப்பந்த துப்புரவுப் பணியாளராக பணியில் இருந்த போது உயிரிழந்த ரமேஷின் குடும்பத்திற்கு சேரவேண்டிய இழப்பீட்டுத் தொகை மற்றும் இதர பயன்கள் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

மேலும், பணியின் போது இறந்த ஒப்பந்த பணியாளருக்கு ஈடாக அவரது குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர பணி வழங்குவதற்கு அரசு ஆணையில் வழிவகை இருப்பின் அவற்றை ஆராய்ந்து மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார். 

இந்த நிகழ்வின் போது மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதி, நகர்நல அலுவலர் கே.சந்தோஷ்குமார் மற்றும் துப்புரவுப் பணியாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் உடனிருந்தனர்.

Newsletter

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...

திருப்பூரில் நீட் தேர்வு: 7 மையங்களில் 3,608 மாணவர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டத்தில் 7 மையங்களில் 3,608 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். ஜெய்வாபாய் மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவியி...