கோவை மலுமிச்சம்பட்டியில் லாரியின் டேங்கர் வெடித்த பயங்கரம்..!! வெல்டிங் வைத்தவர் உயிரிழப்பு…

மலுமிச்சம்பட்டியில் வெல்டிங் வைக்கும் பணியின் போது லாரியின் டேங்கர் திடீரென வெடித்து சிதறியது. இதில் பணியில் ஈடுபட்டிருந்த உத்தரபிரதேசத்தை சேர்ந்த வக்கீல் துடிதுடித்து உயிரை விட்டார்.



கோவை: டேங்கர் வெடித்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தநிலையில், மற்றொருவரும் ஆபத்தானநிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து காவல்துறையினர் நேரில் விசாரணை நடத்தினர்.

கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டியில் உள்ள கடையொன்றில் டேங்கர் லாரியின் டேங்கருக்கு வெல்டிங் வைக்கும் பணி நடைபெற்றது. அப்போது, யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் டேங்கர் திடீரென வெடித்து சிதறியது.



இதில் வெல்டிங் வைத்துக்கொண்டிருந்த உத்தரபிரதேசத்தை சேர்ந்த வக்கீல் என்பவர் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ரவி என்பவர் படுகாயமடைந்தார்.

அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தகவல் கிடைத்து நிகழ்விடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் விபத்துக்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...