பொருளியலில் சிறந்த பேராசிரியருக்கான விருது அவினாசிலிங்கம் பல்கலை., பேராசிரியர் காந்திமதிக்கு வழங்கப்பட்டது



மால்கம் எலிசபத் ஆதிசேஸ்ய்யா நிறுவன குழு 1994-ம் ஆண்டு சென்னையில் நிறுவப்பட்டது. இதன் முக்கிய நோக்கம் பொருளியல் நன்கு கற்பிப்போரையும், ஆராய்ச்சிகளை மேற்கொள்வோரையும் ஊக்கப்படுத்துவதாகும். அதன் அடிப்படையில் வருடந்தோறும் பெருளியலில் சிறந்த பேராசிரியருக்கான விருது வழங்கப்பட்டு வருகிறது.



இந்த ஆண்டும் இன்று பொருளியலில் சிறந்த பேராசிரியருக்கான விருது தொடர்பான நேர்முக தேர்வு நடத்தப்பட்டது. இதில் 17 பேர் தமிழ்நாடு முழுவதும் உள்ள கல்லூரி மற்றும் பல்கலைக்கழகத்தில் இருந்து பங்கேற்றனர்.

அதில் பல்கலைக் கழகங்களுக்கும், கல்லூரிகளுக்கு தனித்தனியாக ஒரு விருது அளிக்கப்பட்டது. அதற்கான விருதளிக்கும் விழா இன்று அவினாசிலிங்கம் பல்கலைக் கழக வளாகத்தில் நடைபெற்றது.

அதில் அவினாசிலிங்கம் பல்கலைக்கழகம் பொருளியியல் துறை இணை பேராசிரியர் காந்திமதிக்கு பல்கலைக் கழகங்களுக்கான விருது வழங்கப்பட்டது. இதனை மால்கம் ஆதிசேஸ்ய்யா குழு உறுப்பினர் மற்றும் பொருளியியல் அளவியல் துறையின் இணை பேராசிரியர் ஸ்ரீனிவாசன் இவ்விருத்திற்கான சான்றிதழையும் முப்பது ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தையும் வழங்கி சிறப்பித்தார்.



இவ்விழாவில், பொருளியியல் துறை தலைவர் கீதா வரவேற்புரை ஆற்றினார். பல்கலைக்கழக வேந்தர் பி.ஆர்.கிருஷ்ணகுமார் தலைமையுரை ஆற்றினார். 

இதில், பல்கலைக்கழக பதிவாளர் கெளசல்யா, முன்னாள் கலையில் புல முதன்மையர் ராமதிலகம், கலைப்புல முதன்மையர் அம்பிகாதேவி, ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...