தடாகம் அருகே திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி - நாஞ்சில் சம்பத் பங்கேற்பு!

தடாகம் பேருந்து நிறுத்தம் அருகே பெரியநாயக்கன் பாளையம் மேற்கு ஒன்றிய தி.மு.க சார்பில் முன்னாள் முதல்வர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் சிறப்பு பேச்சாளராக நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டு, பெண்களுக்கு சேலைகள் மற்றும் விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்.



கோவை: தடாகம் அருகே பெரியநாயக்கன்பாளையம் திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் சேலை மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன.



கோவை தடாகம் பேருந்து நிறுத்தம் அருகே பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றிய தி.மு.க சார்பில் முன்னாள் முதல்வர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இந்த நிகழ்வில் ஒன்றிய செயலாளர் சி.எம்.கிருஷ்ணகுமார் தலைமை தாங்கி பேசினார். கிளை செயலாளர் சபரீஸ்வரன் அனைவரையும் வரவேற்றார். நிர்வாகிகள் ஆனைகட்டி மதன், எம்.ஆர்.டி.செல்வராஜ், கலைவாணி முத்துக்குமார், சிவகுமார், கே.சி.கே.சம்பத்குமார், சோமையம்பாளையம் ஆனந்தக்குமார், நஞ்சுண்டம்புரம் துணைத்தலைவர் திருநாவுக்கரசு, கதிர்வேல் உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர்.



சிறப்பு பேச்சாளர் நாஞ்சில் சம்பத், மாவட்ட செயலாளர் தொ.அ.ரவி ஆகியோர் சிறப்புரையாற்றினர். தொடர்ந்து கால்பந்து வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள், சிருடைகள் மற்றும் பெண்களுக்கு இலவச சேலைகள் வழங்கினர்.



இந்த விழாவில் தலைமை செயற்குழு உறுப்பினர் டி.பி.சுப்ரமணியன், மாவட்ட துணை செயலாளர் அசோக்பாபு ஆறுக்குட்டி, ஒன்றிய செயலாளர் கார்த்திக், ஐ.டி.மாவட்ட ஒருங்கிணைபாளர் ஹரீஸ், நிர்வாகிகள் டி.டி.எஸ்.மூர்த்தி, டி.வி.செல்வராஜ், டி.டி.கே.கதிர்வேல், வீரபாண்டி ஊராட்சித்தலைவர் பழனிச்சாமி, மாணிக்கம் மயில்சாமி, கனகராஜ், பி.டி.கோபால்சாமி, டி.கே.டி.சிவகுமார், டி.எஸ்.ஆர்.அருண்பிரசாத், தடாகம் கிளை செயலாளர்கள் பரமேஸ்வரன், கந்தசாமி, மல்லிகார்ஜூனன், கன்னிமுத்து, சடகுட்டி, குமார் வேலுமணி, ஒன்றிய, பகுதி மற்றும் பேரூர் கழக செயலாளர்கள், பன்னிமடை, சோமையம்பாளையம், 24.வீரபாண்டி, நஞ்சுண்டாபுரம் கிளை செயலாளர்கள், இளைஞரணி நிர்வாகிகள், கட்சி முன்னோடிகள், மகளிர் அணியினர் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்துக்கொண்டனர். இறுதியில் இளைஞர் அணியை சேர்ந்த ஜெகன் பிரசாத் நன்றி கூறினார்.

Newsletter

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் யுவா 2026 முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி

கோவை ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளின் மு...

கோவை மேற்கு மண்டலத்தில் காமராஜர் உணவு திட்ட சமையல் கூடத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மேற்கு மண்டலத்தில் பெருந்தலைவர் காமராஜர் உணவு திட்ட சமையலகம், வடவள்ளி பாதாள சாக்கட...

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...