தடாகம் அருகே திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி - நாஞ்சில் சம்பத் பங்கேற்பு!

தடாகம் பேருந்து நிறுத்தம் அருகே பெரியநாயக்கன் பாளையம் மேற்கு ஒன்றிய தி.மு.க சார்பில் முன்னாள் முதல்வர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் சிறப்பு பேச்சாளராக நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டு, பெண்களுக்கு சேலைகள் மற்றும் விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்.



கோவை: தடாகம் அருகே பெரியநாயக்கன்பாளையம் திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் சேலை மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன.



கோவை தடாகம் பேருந்து நிறுத்தம் அருகே பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றிய தி.மு.க சார்பில் முன்னாள் முதல்வர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இந்த நிகழ்வில் ஒன்றிய செயலாளர் சி.எம்.கிருஷ்ணகுமார் தலைமை தாங்கி பேசினார். கிளை செயலாளர் சபரீஸ்வரன் அனைவரையும் வரவேற்றார். நிர்வாகிகள் ஆனைகட்டி மதன், எம்.ஆர்.டி.செல்வராஜ், கலைவாணி முத்துக்குமார், சிவகுமார், கே.சி.கே.சம்பத்குமார், சோமையம்பாளையம் ஆனந்தக்குமார், நஞ்சுண்டம்புரம் துணைத்தலைவர் திருநாவுக்கரசு, கதிர்வேல் உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர்.



சிறப்பு பேச்சாளர் நாஞ்சில் சம்பத், மாவட்ட செயலாளர் தொ.அ.ரவி ஆகியோர் சிறப்புரையாற்றினர். தொடர்ந்து கால்பந்து வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள், சிருடைகள் மற்றும் பெண்களுக்கு இலவச சேலைகள் வழங்கினர்.



இந்த விழாவில் தலைமை செயற்குழு உறுப்பினர் டி.பி.சுப்ரமணியன், மாவட்ட துணை செயலாளர் அசோக்பாபு ஆறுக்குட்டி, ஒன்றிய செயலாளர் கார்த்திக், ஐ.டி.மாவட்ட ஒருங்கிணைபாளர் ஹரீஸ், நிர்வாகிகள் டி.டி.எஸ்.மூர்த்தி, டி.வி.செல்வராஜ், டி.டி.கே.கதிர்வேல், வீரபாண்டி ஊராட்சித்தலைவர் பழனிச்சாமி, மாணிக்கம் மயில்சாமி, கனகராஜ், பி.டி.கோபால்சாமி, டி.கே.டி.சிவகுமார், டி.எஸ்.ஆர்.அருண்பிரசாத், தடாகம் கிளை செயலாளர்கள் பரமேஸ்வரன், கந்தசாமி, மல்லிகார்ஜூனன், கன்னிமுத்து, சடகுட்டி, குமார் வேலுமணி, ஒன்றிய, பகுதி மற்றும் பேரூர் கழக செயலாளர்கள், பன்னிமடை, சோமையம்பாளையம், 24.வீரபாண்டி, நஞ்சுண்டாபுரம் கிளை செயலாளர்கள், இளைஞரணி நிர்வாகிகள், கட்சி முன்னோடிகள், மகளிர் அணியினர் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்துக்கொண்டனர். இறுதியில் இளைஞர் அணியை சேர்ந்த ஜெகன் பிரசாத் நன்றி கூறினார்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...