கோவையில் ரூ.51 லட்சம் மதிப்பீட்டில் அறிவியல் பூங்கா மேம்படுத்தப்பட்டுள்ளது - மாநகராட்சி ஆணையர் தகவல்!

கோவை‌யில்‌ நமக்கு நாமே திட்டத்தின் கீழ்‌ ரூ.51 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ டாக்டர்‌.அப்துல்கலாம்‌ சிலை, சுழலும்‌ பெரிஸ்கோப்‌, ஈர்ப்பு பந்து, நியூட்டன்‌ 3ம்‌ விதி, கியாபெல்‌ மற்றும்‌ செயின்‌ டிரைவ்‌ உள்ளிட்ட பல்வேறு‌ சிறப்பு அம்சங்களுடன்‌ அறிவியல்‌ பூங்கா மேம்படுத்தப்பட்டு உள்ளது என மாநகராட்சி ஆணையர்‌ பிரதாப்‌ தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை‌யில்‌ நமக்கு நாமே திட்டத்தின் கீழ்‌ ரூ.51 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ அறிவியல்‌ பூங்கா மேம்படுத்தப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையர்‌ பிரதாப்‌ தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர்‌ பிரதாப்‌ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

கோவை‌ மாநகராட்சி மத்திய மண்டலம்‌ டாடாபாத்‌, அழகப்பா செட்டியார்‌ சாலையில்‌ நமக்கு நாமே திட்டத்தின் கீழ்‌ ரூ.51 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ 30 சென்ட்‌ பரப்பளவு கொண்ட இடத்தில்‌ அறிவியல்‌ பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

அறிவியல்‌ பூங்காவில்‌ பார்வையாளர்‌ நேரம்‌ காலை 07.00 மணி முதல்‌ 10.00 மணி வரையிலும்‌, மாலை 4.30 மணி முதல்‌ 7.30 மணி வரையிலும்‌ மாணவ, மாணவியா்கள்‌, ஆசிரியாகள்‌ பயன்பாட்டிற்காக திறக்கப்படுகிறது. இங்கு பார்வையாளர்களுக்கு நுழைவுக்கட்டணம்‌ ஏதும்‌ வசூலிக்கப்படுவதில்லை.

முதலமைச்சர்‌ உத்தரவின் படி, கடந்த 08.05.2023 அன்று நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர்‌ கே.என்‌.நேரு, மாணவர்கள்‌ பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.



இந்த அறிவியல்‌ பூங்காவில்‌ பெரிஸ்கோப்‌ மாதிரி, பி.எஸ்‌.எல்‌.வி.ராக்கெட்‌ மாதிரி, சந்திராயன்‌ 3 மாதிரி, ஈர்ப்பு கருவிகள்‌, டாக்டர்‌.அப்துல்கலாம்‌ சிலை, கார்‌ கட்டமைப்பு, மழை வில்‌ வளைவு, சுழலும்‌ பெரிஸ்கோப்‌, ஒலியின்‌ வேகம்‌, தனிம அட்டவணை, அலை இயக்கம்‌, ஈர்ப்பு பந்து,



நியூட்டன்‌ 3வது விதி, பாஸ்கல்‌ சட்டம்‌, மைய விலக்கு விசை, கியா்பெல்‌ மற்றும்‌ செயின்‌ டிரைவ்‌, ஆற்றல்‌ நிறை மற்றும்‌ மந்த நிலையில்‌ பாதுகாப்பு, மோபியஸ்‌ இசைக்குழு, உணர்வுச்சுவ்‌, உலக நேர குளோப்‌ வகை, ஈரப்பதம்‌ அளவிடும்‌ மீட்டா, மணிக்கூண்டு, எதிரொலிகுழாய்‌, சூரிய குடும்பம்‌, மழை அளவி உள்ளிட்ட அறிவியல்‌ சிறப்பு அம்சங்களை‌ கொண்டு பூங்கா‌ வடிவமைக்கப்பட்டு உள்ளது.



இதனை மாணவ, மாணவியர்கள்‌, ஆசிரியர்கள்‌, பொதுமக்கள்‌ ஆகியோர்‌ நேரில்‌ சென்று பார்வையிட்டு, பயன்பெற வேண்டும். இவ்வாறு மாநகராட்சி ஆணையாளா்‌ பிரதாப்‌ தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை மேற்கு மண்டலத்தில் காமராஜர் உணவு திட்ட சமையல் கூடத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மேற்கு மண்டலத்தில் பெருந்தலைவர் காமராஜர் உணவு திட்ட சமையலகம், வடவள்ளி பாதாள சாக்கட...

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...