இலவச வீட்டுமனை வழங்கக் கோரி சாலையோர வாசிகள் ஆட்சியரிடம் மனு

கோவை, டவுன்ஹால் அருகே சாலையோரத்தில் வசித்து வரும் குடும்பத்தினர் இலவச வீட்டுமனை வழங்கக் கோரி இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



கோவை டவுன்ஹால் பகுதியில் மணிக்கூட்டு பின்புறம் சாலையோரத்தில் வசித்து வருபவர் சலீம் பாட்ஷா. உடல் ஊனமுற்ற இவருக்கு திருமணமாகி 4 பெண் குழந்தைகள் உள்ளது. 

பெண் பிள்ளைகளை வைத்துக்கொண்டு சாலையில் தங்குவது சிரமமாக உள்ளது எனவும், சாலையோரத்தில் வசித்து வரும் எங்களுக்கு இலவச வீட்டுமனை ஒன்று வழங்க வேண்டும் எனவும் சாதிக் பாட்ஷா இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

மேலும், எங்களுக்கு குடும்ப அட்டை, ஆதார் உள்ளிட்ட எவ்வித அடையாள அட்டைகளும் இல்லை என்பதால் அதனையும் பெற்றுத் தர மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அம்மனுவில் தெரிவித்துள்ளார்.

இதேப்போன்று காந்திபார்க் பகுதியில் சாலையில் வசித்து வரும் மீனாட்சி உள்ளிட்ட குடும்பத்தினரும் தங்களுக்கு இலவச வீட்டுமனை வேண்டி ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். 



அதில், தாங்கள் காந்திபார்க் அருகே சாலையோரத்தில் 20 வருடங்களுக்கும் மேலாக வசித்து வருவதாகவும், சாட்டையடித்து தொழில் செய்து வருவதாகவும், எங்களுக்கு இலவச வீட்டுமனை வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

மேலும், குழந்தைகளை பள்ளிக்குச் செல்ல மாவட்ட நிர்வாகம் வழிவகை செய்ய வேண்டும் எனவும் அம்மனுவில் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...