தாராபுரம் அருகே போலி மருத்துவர் நடத்தி வந்த மருத்துவமனைக்கு சீல் வைத்த அதிகாரிகள்!

தாராபுரத்தை அடுத்த அலங்கியம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தாசநாயக்கன்பட்டி பகுதியில் முறையாக மருத்துவம் படிக்காமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த தனலட்சுமி என்பவரின் மருத்துவமனைக்கு திருப்பூரைச் சேர்ந்த மருத்துவத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.


திருப்பூர்: தாராபுரம் அடுத்த தாசநாயக்கன்பட்டி பகுதியில் முறையாக மருத்துவம் படிக்காத போலி மருத்துவர் நடத்தி வந்த மருத்துவமனைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த அலங்கியம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தாசன்நாயக்கம்பட்டி பகுதியில் முறையாக மருத்துவம் படிக்காமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த புகாரின் அடிப்படையில் மருத்துவ ஊரக நலப்பணிகள் துறை இணை இயக்குனர் கனகராணி தலைமையில், அருண்பாபு, ஹரி மற்றும் கோபால கிருஷ்ணன் ஆகிய அதிகாரிகள் தாசநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள தனலட்சுமி என்பவரின் மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வில், மருத்துவமனையை நடத்தி வந்த திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் திருவள்ளுவர் நகர் பகுதியைச் சேர்ந்த தனலட்சுமி (50) முறையாக மருத்துவம் படிக்காமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்தது.

இதனை அடுத்து மருத்துவத்துறை அதிகாரிகள் காவல்துறையினர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் முன்னிலையில் முறையாக மருத்துவம் படிக்காமல் சிகிச்சை அளித்து வந்த தனலட்சுமி என்பவரின் மருத்துவமனைக்கு சீல் வைத்தனர்.



கடந்த ஆறு மாத காலங்களாக போலி மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வந்தது தாசநாயக்கன்பட்டி பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன், முறையாக மருத்துவம் படிக்காமல் தாசநாயக்கன்பட்டி பகுதியில் போலி மருத்துவர் சிகிச்சை அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் இதேபோல் தாராபுரம் சுற்று வட்டார பகுதிகளில் முறையாக மருத்துவம் படிக்காமல் போலி மருத்துவர்கள் உள்ளனரா என அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என தாராபுரம் சுற்றுவட்டார மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...