கோவையில் முதல்முறையாக பார்வையற்றோர் வேலைவாய்ப்பு தொழில் பயிற்சி மையம் துவக்கம்

ரோட்டரி கிளப் ஆஃப் கோயமுத்தூர் ஸ்மார்ட் சிட்டி, National Federation of Blind and Coimbatore Spark Round Table 323 உடன் இணைந்து, கோவையில் முதல் முறையாக பார்வையற்றோர்களுக்கான வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தை துவக்கி உள்ளது. இதில் உள்ள 20 பார்வையற்ற மாணவர்களுக்கு மூன்று மாத பயிற்சி அளிக்கப்படுகிறது.


கோவை: ரோட்டரி கிளப் ஆஃப் கோயமுத்தூர் ஸ்மார்ட் சிட்டி போன்று, எந்தத் தன்னார்வ அமைப்புகள் முன்னெடுப்புகளை முன்னெடுக்கும் பொழுது அதற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் முழு ஒத்துழைப்பு நல்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் தெரிவித்தார்

கோவை சிங்காநல்லூர் உப்பிலிபாளையம் பகுதியில், ரோட்டரி கிளப் ஆஃப் கோயமுத்தூர் ஸ்மார்ட் சிட்டி, National Federation of Blind and Coimbatore Spark Round Table 323 உடன் இணைந்து, கோவையில் முதல் முறையாக பார்வையற்றோர்களுக்கான வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தை துவக்கி உள்ளது.



இதனை கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் துவக்கி வைத்து பார்வையிட்டார். இதில் 20 பார்வையற்ற மாணவர்கள் தற்போது உள்ளனர். அவர்களுக்கு மூன்று மாத பயிற்சி அளிக்கப்படுகிறது. அவர்களுக்கு தங்கும் இடம் உணவு ஆகியவையும் இலவசமாக வழங்கப்படுகிறது.

அவர்களுக்கு இங்கு கணினி பயிற்சி அளிக்கபடுகிறது. மூன்று மாத பயிற்சி நிறைவு பெற்ற பின்பு பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் சான்றிதழ் அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்குள்ள பயிற்சியாளர் சாம்கார்த்திக் என்பவரும் பார்வை திறன் அற்றவர் ஆவார். இவர் கண்டுபிடித்த செயலியின் மூலம் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. அச்செயலி மூலம் ஒவ்வொரு கமெண்ட்டும் ஒலியாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் கணினியை கையாளுவது எளிமையாக இருக்கக்கூடும்.



இந்நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர், இங்கு பார்வையற்றோருக்கு பொதுத்தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்பட்டு வந்த நிலையில் கூடுதல் சிறப்பம்சமாக வேலை வாய்ப்பு பயிற்சி மையமும் துவங்கப்பட்டுள்ளது என்றார்.

முதற்கட்டமாக 20 பேர் இங்கு பயிற்சி பெறும் வகையில் துவங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பிலும் முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என்றார். மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலை வாய்ப்பு முகாம் மாவட்ட நிர்வாகம் சார்பில் தொடர்ந்து நடத்தப்படும் என தெரிவித்த அவர், வாரந்தோறும் மக்கள் குறை தீர்ப்பு கூட்டங்களுக்கு வரும் மாற்றுத்திறனாளிகளில் அவர்களின் திறமைகளை கண்டறிந்து வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

எந்தத் தன்னார்வ அமைப்புகள் இது போன்ற முன்னெடுப்புகளை முன்னெடுக்கும் பொழுது மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒத்துழைப்பு நல்கப்படும் என தெரிவித்தார் இந்நிகழ்வில், ரோட்டரி கிளப் ஆஃப் கோயமுத்தூர் ஸ்மார்ட் சிட்டி, National Federation of Blind and Coimbatore Spark Round Table 323 நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...