திருப்பூரில் ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு - பொக்கலைன் இயந்திரத்துடன் சென்ற மாநகராட்சி அதிகாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதம்

திருப்பூரில் ஆக்கிரமிட்பு பகுதியில் இருந்து காலி செய்ய வேண்டும் என்று ஆக்கிரமிட்பு வீடுகளை இடிப்பதற்காக பொக்லைன் எந்திரத்துடன் மாநகராட்சி அதிகாரிகள் சென்றனர். அப்போது பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு நிலவியது.



திருப்பூர்: குழந்தைகளின் பள்ளி படிப்பு முடியும் வரை தங்களை அணைப்பாளையம் பகுதியில் இருந்து வெளியேற்றக்கூடாது என்று மாநகராட்சி அதிகாரிகளிடம் பொதுமக்கள் கூறினர். இதனையடுத்து காலி செய்த வீடுகளை மட்டும் இடித்து அவர்கள் சென்றனர்.

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட கல்லூரி சாலை, அணைப்பாளையம் பகுதியில் ரயில் தண்டவாளத்தை ஒட்டிய புறம்போக்கு நிலத்தில் பொதுமக்கள் சிலர் 30 வருடங்களுக்கு மேலாக வீடுகளை கட்டி குடியிருந்து வந்தனர்.

இந்நிலையில் அப்பகுதியில் ஆக்கிரமித்த வீடுகளை காலி செய்ய வேண்டும் எனவும், காலி செய்பவர்களுக்கு நெருப்பெரிச்சல் பகுதியில் வீடுகள் வழங்கப்படும் என மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் இது தொடர்பாக பத்துக்கும் மேற்பட்ட நபர்களுக்கு நெருப்பெரிச்சல் பகுதியில் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று மாநகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமித்த வீடுகளை இடிப்பதற்காக பொக்லைன் இயந்திரத்துடன் அணைப்பாளையம் பகுதிக்கு சென்றனர்.



அப்போது அங்கு குடியிருந்த பொதுமக்கள் வீடுகளை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். தங்களுக்கு இன்னும் நெருப்பெரிச்சல் பகுதியில் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படவில்லை எனவும் அவ்வாறு இருக்கும் நிலையில் தாங்கள் எங்கு போய் தங்க முடியும், அதுமட்டுமின்றி எங்களது குழந்தைகள் இங்கே அருகில் உள்ள பள்ளியில் கல்வி பயின்று வருகிறார்கள். தற்பொழுது நெருப்பெரிச்சல் பகுதியில் வீடு ஒதுக்கீடு செய்தால் அங்கிருந்து பள்ளிக்கு எவ்வாறு வர முடியும், எனவே எங்களுக்கு இதே பகுதியில் வீடுகள் ஒதுக்கீடு செய்து தர வேண்டும் அல்லது எங்களது குழந்தைகளின் பள்ளி படிப்பு முடியும் வரை இங்கேயே தங்க மாநகராட்சி அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதனால் அங்கு சற்று நேரம் பரபரப்பு நிலவியது.



இதையடுத்து மாநகராட்சி நிர்வாகிகள் காலி செய்த வீடுகளை மட்டும் இடித்துவிட்டு சென்றனர்.

Newsletter

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...