நுகர்வோர் நீதிமன்றத்தை எப்படி அணுகுவது? - கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சி!

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில், கல்லூரி மாணவர்களுக்கு நுகர்வோர் உரிமைகள் மற்றும் குறைதீர் ஆணைய செயல்பாடுகள் குறித்த ஒரு நாள் பயிற்சியில், ஆணையத்தை அணுகும் வழிமுறைகள் குறித்து விளக்கப்பட்டது.



கோவை: மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில், கல்லூரி மாணவர்களுக்கு ஆணையத்தை அணுகும் வழிமுறைகள் குறித்த ஒரு நாள் பயிற்சி அளிக்கப்பட்டது.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இங்கு கல்லூரி மாணவர்களுக்கு நுகர்வோர் உரிமைகள் மற்றும் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கமளிக்கும் விதமாக ஒரு நாள் பயிற்சி நடைபெற்றது.

இதில் கோவை மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவரும் ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதியுமான தங்கவேல், ஆணையத்தின் உறுப்பினர்கள் மாரிமுத்து, சுகுணா ஆகியோர் மாணவர்களுக்கு நுகர்வோர் உரிமைகள் மற்றும் ஆணையத்தை அணுகும் வழிமுறைகள் குறித்து விளக்கம் அளித்தனர்.



இந்த பயிற்சியில், என்.ஜி.பி கல்லூரியில் இளங்கலை வணிகவியல் பயிலும் மாணவர்கள், ஆசியர்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...