கோவையில் அரசு விழாவின் பாதுகாப்பு பணியில் தனியார் பவுன்சர்களை ஈடுபடுத்தியதால் சர்ச்சை!

கோவை கொடிசியா வளாகத்தில் இன்றைய தினம் அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன் மற்றும் டி.ஆர்.பி. ராஜா ஆகியோர் கலந்து கொண்ட தமிழ்நாடு ஸ்டார்ட் அப் திருவிழா கண்காட்சியில் பாதுகாப்பு பணியில் காவல்துறையினரை ஈடுபடுத்தாமல், தனியார் நிறுவன பவுன்சர்களை ஈடுபடுத்தப்படுத்திய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கொடிசியா வளாகத்தில் தமிழக அரசின் சார்பில்தமிழ்நாடு ஸ்டார்ட் அப் திருவிழா கண்காட்சி பாதுகாப்பு பணிக்கு தமிழக காவல் துறையை நிறுத்தாமல், தனியார் நிறுவன பவுன்சர்கள்நிறுத்தப்பட்டுஇருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கோவை கொடிசியா வளாகத்தில் தமிழ்நாடு சிறு ,குறு, நடுத்தர தொழில் துறை சார்பில் தமிழ்நாடு ஸ்டார்ட் அப் திருவிழா கண்காட்சி இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டு இருந்தது.

இதனால் பதிவு செய்து அனுமதி பெற்ற நபர்கள்கழுத்தில் டேக் அணிந்து இருந்தால் மட்டுமே விழா அரங்கு மற்றும் கண்காட்சி அரங்குகளில் அனுமதிக்கப்பட்டனர். அரங்கம் மற்றும் கண்காட்சி வாயில்களில் பாதுகாப்பு பணிகளுக்காக தனியார் நிறுவனங்களை சேர்ந்த பவுன்சர்கள் நிறுத்தப்பட்டு இருந்தனர்.



கருப்பு உடையில் நின்றிருந்த பவுன்சர்கள் டேக் அணியாமல் வந்த நபர்களை அனுமதிக்க மறுத்து வெளியேற்றினர். மேலும், அரசு அலுவலர்கள், பத்திரிகையாளர்கள்கண்டிப்பாக அடையாள அட்டையை காட்டிவிட்டு தான் செல்ல வேண்டும் என்றும் பவுன்சர்கள் நிர்பந்தம் செய்தனர். இதனால் நிகழ்ச்சிக்கு தொழில் கனவுகளுடன் வந்தவர்கள் திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டது.

மேலும், ஒரு சிலர் கருப்பு உடை அணிந்த பவுன்சர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழக அமைச்சர்கள் பங்கேற்கும் அரசு விழாவில், தமிழக காவல்துறையினரை பாதுகாப்பு பணிக்கு ஈடுபடுத்தாமல், தனியார் நிறுவன பவுன்சர்களை ஈடுபடுத்தி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...