ஆடி கடைசி வெள்ளி விழா கொண்டாட்டம் – ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள அருள்மிகு பத்ரகாளியம்மன் திருக்கோவிலில் நடைபெற்ற ஆடி கடைசி வெள்ளி விழாவில் நடைபெற்ற அசுவ மேத வழிபாட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து சென்றனர்.



கோவை: ஆடி கடைசி வெள்ளியையொட்டி பத்தரகாளியம்மன் கோவிலில் நடைபெற்ற விழாவில் குதிரை இரு கால்களையும் தூக்கி அம்மனை வணங்கிய காட்சி பக்தர்களை பரவசப்படுத்தியது.



அதனைத்தொடர்ந்து நடைபெற்ற அம்மன் பவனியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு துதி பாடியபடியே ஊர்வலத்தில் பங்கேற்றனர்.

கோவை சத்தி சாலை சரவணம்பட்டி பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு பத்ரகாளியம்மன் திருக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் வரும் அனைத்து வெள்ளிக்கிழமைகளும் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். அந்த வகையில் 52 வது ஆண்டு ஆடி திருவிழா கடந்த மாதம் 21ஆம் தேதி கோலாகலமாக துவங்கியது.

ஆடி மாதத்தில் நான்கு வெள்ளிக்கிழமைகளிலும் பல்வேறு நிகழ்ச்சிகளுடன் சிறப்பாக நடைபெற்ற விழாவில் இறுதி வெள்ளிக்கிழமையாக நேற்றைய தினம் ஆவணி ஒன்றாம் தேதிவெள்ளிக்கிழமையில் ஆடி ஐந்தாவது வெள்ளி விழா கோலாகலமாக நடைபெற்றது.

முன்னதாக உற்சவமூர்த்திக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிவனடியார்கள் மந்திரங்கள் முழங்க சிறப்பு திருவிளக்கு வழிபாடு நடத்தப்பட்டது. ஜமாப் இசையுடன் பம்பை உடுக்கை முழங்க அம்மனுக்கு ஆரத்திகள் எடுக்கப்பட்ட நிலையில் குதிரை நிறுத்தி வைக்கப்பட்டு அசுவ மேத வழிபாடும் நடத்தப்பட்டது.



அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் உற்சவமூர்த்தியான அருள்மிகு பத்திரகாளியம்மன் எழுந்தருள அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தகுதிரை இரு கால்களையும் தூக்கி வணங்கிய காட்சி பக்தர்களை பரவசப்படுத்தியது. தொடர்ந்து நடைபெற்ற அம்மன் பவனியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை துதித்து பாடியபடியே ஊர்வலத்தில் பங்கேற்றனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...