வானத்தில் பல ஸ்டார்கள் ஜொலிக்கலாம், பூமியில் ஒரே ஸ்டார் நம்ம சூப்பர் ஸ்டார் - கோவையில் போஸ்டர் ஒட்டிய ரஜினி ரசிகர்கள்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடிகர் ரஜினி ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில் வானத்தில் பல ஸ்டார்கள் ஜொலிக்கலாம், ஆனால் பூமியில் ஜொலிப்பது ஒரே ஸ்டார் நம்ம சூப்பர் ஸ்டார் என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.



கோவை: நடிகர் ரஜினி நடிப்பில் வெளியாகியுள்ள ஜெயிலர் திரைப்படம் சக்கைபோடு போக்குவருகிறது. இதனால் குஷியான அவரது ரசிகர்கள் பல்வேறு இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

நடிகர் ரஜினி நடித்த ஜெயிலர் திரைப்படம் பெரும் வெற்றி பெற்று வசூலில் சாதனையும் படைத்து வருகின்றது. இதனால் ரஜினி ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இந்நிலையில் கோவை நகரின் பல்வேறு இடங்களில் "வானத்தில் பல ஸ்டார்கள் ஜொலிக்கலாம், பூமியில் ஒரே ஸ்டார் நம்ம சூப்பர் ஸ்டார்" என்ற வாசகங்களுடன் ரஜினி ரசிகர்கள் சுவரொட்டிகள் ஒட்டியுள்ளனர்.



கோவை ரயில் நிலையம், டவுன்ஹால், ஒப்பணக்கார வீதி, காந்திபுரம் உட்பட பல்வேறு பகுதிகளில் இந்த சுவரொட்டகள் ஒட்டப்பட்டுள்ளன. தமிழ் திரையுலகில் அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற பேச்சு அத்துறையினர் மத்தியில் நிலவி வருகிறது.

அடுத்த சூப்பர் ஸ்டார் குறித்து மாறுபட்ட கருத்துகளை திரையுலகில் இருப்பவர்களும், விமர்சகர்களும் தெரிவித்து வரும் நிலையில் கோவை மாவட்ட ரஜினி ரசிகர்கள் இந்த போஸ்ட்டரை ஒட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...