மினி ஸ்டேடியம் தேர்வு பணி தீவிரம் - மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி பேட்டி

கோவையில் விளையாட்டு மைதானங்கள் இல்லாத அரசு பள்ளிகள் கணக்கெடுக்கபட்டு வருவதாகவும், தொகுதி வாரியாக மினி ஸ்டேடியம் அமைப்பதற்காக இடம் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருவதாகவும், இடங்கள் தேர்வு செய்யப்பட்டவுடன் மைதானங்கள் அமைக்க இருப்பதாக மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தெரிவித்தார்.



கோவை: கால்பந்தை உதைத்து தனியார் பங்களிப்புடன் அமைக்கப்பட்ட விளையாட்டு மைதானத்தை மாணவர்கள் பயன்பாட்டிற்காக மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி திறந்து வைத்தார்.

கோவை செட்டிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு மைதானம் மேம்படுத்தி தர வேண்டி கோவை மாவட்ட நிர்வாகத்திடம் ஏற்கனவே கோரிக்கை விடுக்கப்பட்டுருந்தது.

இதையடுத்து கோவை மாவட்ட நிர்வாகம், தனியார் நிறுவனமான வாக்-கரோ நிறுவனத்தின் சமூக நிதி பங்களிப்புடன் இணைந்து சுமார் 6.50 லட்சம் மதிப்பீட்டில் ஏற்கனவே இருந்த விளையாட்டு மைதானம் மேம்படுத்தப்பட்டு புதிதாக கால்பந்து அகடாமி அமைக்கபட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது.



பள்ளி தலைமையாசிரியர் கிருஷ்ணவேணி தலைமையில் நடைபெற்ற விழாவில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, செட்டிப்பாளையம் பேரூராட்சி தலைவர் இரங்கசாமி, வாக்-கரோ செயல் அலுவலர் நவ்சாத் உள்ளிடோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.



முன்னதாக மாணவர்களுக்கு கால்பந்தினை வழங்கிய மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி கால்பந்தை உதைத்து மைதானத்தை திறந்து வைத்தார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தவர்,



தனியார் பங்களிப்புடன் இந்த மைதானம் சுமார் 6.50 லட்சம் ரூபாய் மதிப்பில் திறந்து வைத்துள்ளதாகவும், இதைபோல் மாவட்டத்தில் பல இடங்களிலும் இதைபோல் தனியார் பங்களிப்புடன் பள்ளி விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டு வருவதாகவும், விளையாட்டு மைதானங்கள் இல்லாத பள்ளிகள் கணக்கு எடுக்கப்பட்டு கோவை மாவட்டத்தை பொறுத்தவரை மினி ஸ்டேடியம் அமைக்கபட உள்ளதாக கூறினார்.

தற்போது பொள்ளாச்சியில் மினி ஸ்டேடியம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டதாகவும், இதைபோல் தொகுதி வாரியாக மினி ஸ்டேடியம் பணி அமைப்பதற்காக இடம் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருவதாக கூறியதுடன் இடங்கள் தேர்வு செய்யப்பட்டவுடன் மைதானங்கள் அமைக்க இருப்பதாக தெரிவித்தார்.

Newsletter

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...