அங்கன்வாடி மையங்களில் நேரில் ஆய்வு - குழந்தைகளுடன் கலந்துரையாடினார் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார்

கோவையில் அங்கன்வாடி மையங்களில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் ஆய்வு நடத்தினர். அப்போது, அங்கிருந்த பணியாளர்களிடம் பொருட்களின் தரம் குறிந்து கேட்டறிந்த அவர், குழந்தைகளுடன் கலந்துரையாடி மகிழ்ச்சியடைந்தார்.


கோவை: புளியகுளம் பகுதியில் உள்ள நியாயவிலைக்கடை, அங்கன்வாடி மையம், பிரத்யேக மருத்துவ முகாம் ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

கோவையில் மாநகராட்சியில் உள்ள நியாயவிலை கடைகள், அங்கன்வாடி மையங்களில் அவ்வப்போது மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்து வருகின்றனர்.



அதன்படி இன்று கோவை மாநகராட்சி புளியகுளம் பகுதியில் உள்ள அமுதம் அங்கன்வாடி நிலையம் மற்றும் நியாய விலைக்கடையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். அப்போது, பொருட்களின் தரம் குறித்து அங்கிருந்த பணியாளர்களிடம் அவர் கேட்டறிந்தார்.



அதனை தொடர்ந்து அப்பகுதியில் உள்ள மாநகராட்சி துவக்கப்பள்ளியில் நடைபெற்று வரும் பள்ளி மாணவர்களுக்கான பிரத்யேக சிறப்பு மருத்துவ முகாமினை நேரில் பார்வையிட்டார். பின்னர் பெரியார் நகர் அங்கன்வாடி மையத்தை நேரில் சென்று பார்வையிட்ட அவர், அங்கு குழந்தைகளுக்கு வழங்கப்படும் சிற்றுண்டிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, குழந்தைகளுடன் கலந்துரையாடினார்.

Newsletter

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...