நூல் விலை கிலோவுக்கு ரூ.10 உயர்வு - நூற்பாலைகள் அறிவிப்பு!

நூல் விலையை 15 நாளைக்கு ஒருமுறை வெளியிடப்படும் என நூற்பாலைகள் அறிவித்திருந்த நிலையில், நூல் விலை உயர்வு பட்டியலை நூற்பாலைகள் இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி அனைத்து வகை நூல்களும் கிலோவுக்கு ரூ.10 உயர்த்தி நூற்பாலைகள் அறிவித்துள்ளன.



திருப்பூர்: நூல் விலை கிலோவுக்கு ரூ.10 உயர்த்தி நூற்பாலைகள் இன்று அறிவித்துள்ளன.

திருப்பூரில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. பின்னலாடை தயாரிப்புக்கு மிக முக்கிய மூலப்பொருளாக இருந்து வருவது நூல் ஆகும்.



தொழில்துறையினர் தங்களுக்கு ஆர்டர்கள் கிடைத்தவுடன், அதற்கேற்றபடி நூல்களை மொத்தமாக கொள்முதல் செய்து ஆடைகளை தயாரிப்பார்கள். நூல் விலை உள்பட மூலப்பொருட்களின் விலையை கருத்தில் கொண்டு ஆடைகளின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

இந்நிலையில் நூல் விலையில் அடிக்கடி மாற்றம் ஏற்படுவதால், தொழில்துறையினர் ஆடைகளின் விலையை நிர்ணயம் செய்வதில் குழப்பம் ஏற்படும். கடந்த ஆண்டில் அடிக்கடி நூல் விலை உயர்ந்து வந்தது. எனவே நூல் விலையை குறைக்க தொழில் துறையினர் வலியுறுத்தி வந்தனர்.



இந்த நிலையில் நடப்பு ஆண்டில் ஜனவரி மாதம் 20 ரூபாய் நூல் விலை குறைந்த நிலையில், பிப்ரவரி மாதத்தில் நூல் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி ஜனவரி மாத நிலையை தொடரும் என நூற்பாலைகள் அறிவித்திருந்தது.

இதன் தொடர்ச்சியாக மார்ச் மாதத்திற்கான நூல் விலைகளும் எந்த விதமான மாற்றமும் ஏற்படவில்லை. இதேபோல் ஏப்ரல், மே, ஜூன் மாதத்திலும் நூல் விலையில் பெரிய மாற்றம் இல்லாமல் நீடித்தது.

ஜூலை மாதத்திற்கான நூல் விலை கிலோவுக்கு ரூ.20 முதல் 25 குறைந்தது. இதற்கிடையே நடப்பு மாதத்திற்கான (ஆகஸ்டு) நூல் விலையை நூற்பாலைகள் கடந்த 1ம் தேதி அறிவித்தன. இதில் கடந்த மாத விலையே தொடரும் எந்த மாற்றமும் இல்லை என நூற்பாலைகள் அறிவித்தன.

இந்நிலையில், நூலின் விலையை மாதத்திற்கு இரண்டு முறை, அதாவது 15 நாட்களுக்கு ஒரு முறை வெளியிடுவதாக நூற்பாலைகள் அறிவித்தன. அதன்படி இன்று நூற்பாலைகள் நூல் விலை பட்டியலை வெளியிட்டனர்.

அதில், அனைத்து வகை நூல்களும் கிலோவுக்கு ரூ.10 உயர்த்தப்பட்டு உள்ளது. அதன்படி ஒரு கிலோ 10வது நம்பர் கோம்டு நூல் ரூ.175க்கும், 16ஆம் நம்பர் ரூ.185-க்கும், 20ஆவது நம்பர் கோம்டு நூல் ரூ.243-க்கும், 24-ம் நம்பர் ரூ.255-க்கும், 30-ம் நம்பர் ரூ.265-க்கும், 34-ம் நம்பர் ரூ.280-க்கும் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 40-ம் நம்பர் ரூ.300-க்கும், 20-ம் நம்பர் செமி கோம்டு நூல் கிலோ ரூ.235-க்கும், 24-ம் நம்பர் ரூ. 245-க்கும், 30-ம் நம்பர் ரூ.255-க்கும், 34-ம் நம்பர் ரூ. 270-க்கும், 40-ம் நம்பர் ரூ.290-க்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...