திருப்பூரில் பவளக்கொடி கும்மி குழுவினரின் 54 வது அரங்கேற்ற விழா - மேயர், துணை மேயர் பங்கேற்பு!

திருப்பூர் அடுத்த வினோபா நகர் பகுதியில் நடைபெற்ற பவளக்கொடி கும்மியாட்ட குழுவினரின் 54 வது அரங்கேற்ற விழாவில் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் மற்றும் துணை மேயர் பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கலைஞர்களை பாராட்டினர்.



திருப்பூர்: திருப்பூர் அடுத்த வினோபா நகரில் நடைபெற்ற பவளக்கொடி கும்மி குழுவினரின் 54 வது அரங்கேற்ற விழாவில் மேயர் துணை மேயர் உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தனர்.

அழிந்து வரக்கூடிய பாரம்பரிய தமிழ் கலையான கும்மி கலையை மீட்டெடுக்கும் முயற்சியில் ஏராளமான குழுவினர் கொங்கு மண்டலம் முழுவதும் பெண்கள், சிறுவர்கள் உட்பட பொதுமக்களுக்கு பயிற்சி அளித்து அரங்கேற்ற நிகழ்வுகளை நடத்தி வருகின்றனர்.



அதன் ஒரு பகுதியாக திருப்பூர் தாராபுரம் சாலை பெருச்சிபாளையம் வினோபா நகர் பகுதியில் பவளக்கொடி கும்மியாட்டக் குழுவினரின் 54 வது அரங்கேற்ற விழா நடைபெற்றது. வினோபா நகர் பகுதியை சேர்ந்த ஏராளமானோர் இதில், கலந்து கொண்டு ஒரு மாத காலத்திற்கு மேலாக பயிற்சி பெற்றனர்.



இந்நிலையில் இன்று 54வது அரங்கேற்ற விழா வினோபா நகர் பகுதியில் உள்ள சக்தி விநாயகர் கோவில் மைதானத்தில் நடைபெற்றது.



பவளக்கொடி கும்மியாட்ட குழுவின் ஆசிரியரும் ஒருங்கிணைப்பாளருமான அம்மன் விஸ்வநாதன், மூத்த ஆசிரியர்கள் அருணாச்சலம், பரமசிவம், மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டு வள்ளியை முருகன் விநாயகர் பெருமான் துணையோடு திருமணம் செய்தது முதல் ஏராளமான பாடல்களை மெட்டுக்களோடு பாடினர்.



பாடலுக்கு ஏற்றவாறு ஒரே மாதிரியான சீருடை அணிந்த சிறுவர் சிறுமியர் உட்பட பெண்கள் ஒரே மாதிரி நடனமாடி பார்ப்போரை வியப்பில் ஆழ்த்தினர்.



54வது அரங்கேற்ற விழாவில் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் துணை மேயர் பாலசுப்பிரமணியம் மாமன்ற உறுப்பினர் உள்ளிட்டோர் கலந்துகொண்டு குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...