நமது தொழிற் பயிற்சி நிலையத்தில் நமது சகோதரிகள் விழிப்புணர்வு நிகழ்ச்சி - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை மகளிர் அரசினர் தொழிற் பயிற்சி நிலையம் மற்றும் ஆனைக்கட்டி சேர்க்கையை ஊக்குவிக்கும் வகையில் தொழிற் பயிற்சி நிலையங்களின் ஆய்வகங்கள் பணிமனைகள் மற்றும் இதர நவீன வசதிகளை மாணவிகள் பெற்றோர்கள் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


கோவை: கோவை மகளிர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் ஆனைக்கட்டி தொழிற்பயிற்சி நிலையங்களில் பெண் பயிற்சியாளர்களின் சேர்க்கையை அதிகரிக்க வருகின்ற 17ம் தேதி நமது தொழிற்பயிற்சி நிலையத்தில் நமது சகோதரிகள் (Our Sisters in Our ITI) என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கோவை மகளிர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் ஆனைக்கட்டி தொழிற்பயிற்சி நிலையங்களில் 2023 ஆம் ஆண்டிற்கான சேர்க்கை 13.07.2023 முதல் நடைபெற்று வருகிறது. இதில் பெண் பயிற்சியாளர்களின் சேர்க்கையை அதிகரிக்க வருகின்ற 17ம் தேதி அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் (மகளிர்), கோயம்புத்தூர் மற்றும் ஆனைக்கட்டி தொழிற்பயிற்சி நிலையங்களில் "நமது தொழிற்பயிற்சி நிலையத்தில் நமது சகோதரிகள் (Our Sisters in Our ITI) என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சேர்க்கையை ஊக்குவிக்கும் வகையில் தொழிற்பயிற்சி நிலையங்களின் ஆய்வகங்கள் பணிமனைகள் மற்றும் இதர நவீன வசதிகளை மாணவிகள் பெற்றோர்கள் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தொழிற் பயிற்சி நிலையங்களுக்கு வருகை புரிபவர்களைக் கொண்டு Signature Campaign (கையெழுத்துஇயக்கம்) நடைபெற உள்ளது.

தொழிற்பயிற்சி நிலைய பயிற்சியாளர்களால் செய்யப்பட்ட அனைத்து Project களை காட்சிப்படுத்தி விருந்தினர்கள் பார்வையிட உரிய வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

தொழிற்பயிற்சி நிலையத்திற்கு வருகை புரியும் விருந்தினர்களைவ்ஊக்குவிக்கும் விதமாக தொழிற்கல்வி குறித்து பேச்சுப் போட்டி ஓவியப் போட்டி, கவிதைப் போட்டி போன்றவை நடைபெற உள்ளது. முந்தைய ஆண்டுகளில் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்ந்து பயிற்சி நிறைவு செய்து முன்னணி நிறுவனங்களில் பணிபுரியும் பயிற்சியாளர்களைக் கொண்டு தொழிற் பயிற்சியின் நன்மைகள்

குறித்து எடுத்துரைக்கப்பட உள்ளது.

மேலும் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளும் அனைவருக்கும் சிற்றுண்டிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சிக்கு அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் (மகளிர்) கோயம்புத்தூர் மற்றும் ஆனைக்கட்டி தொழிற்பயிற்சி நிலையங்களில் தற்போது பயிற்சி பெற்று வரும் பயிற்சியாளர்கள் மற்றும் புதிதாக சேர்க்கை செய்யப்பட்ட பயிற்சியாளர்களின் சகோதரிகள் பயிற்சி பெறும் நிலையில் உள்ள உறவினர் பெண்கள் கலந்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...