கோவை வடக்கு, மேற்கு மண்டலத்தில் பல்வேறு பணிகள் குறித்து மேயர் கல்பனா ஆய்வு!

கோவை மேற்கு மண்டலத்தில் ரூ.1 லட்சம் மதிப்பில் தூய்மை பணியாளர்களுக்கான உபகரணங்களை வழங்கிய மேயர் கல்பனா ஆனந்தகுமார், வடக்கு மண்டலத்தில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகள் குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டார்.


கோவை: கோவை மாநகராட்சியில் வடக்கு, மேற்கு மண்டலங்களில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகள் குறித்து மேயர் கல்பனா ஆனந்தகுமார் ஆய்வு மேற்கொண்டார்.



கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம்‌ வார்டு எண்‌.34க்கு உட்பட்ட சிவாஜி காலனியில்‌ வானவில்‌ பொது அறக்கட்டளை சார்பில்‌ ரூ.1லட்சம்‌ மதிப்பீட்டில்‌ குப்பைகள்‌ சேகரிக்கும்‌ 5 தள்ளுவண்டிகள்‌, அதற்கான புதிய குப்பைத்‌ தொட்டிகளை மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ சுகாதார தூய்மை பணியாளார்களுக்கு வழங்கினார்‌.



கோவை வடக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.19க்குட்பட்ட பாரதியார்‌ ரோடு, எம்‌.கே.பி.காலனி பகுதியில்‌ மழைநீர்‌ வடிகால்‌ தூர்வாரும்‌ பணி நடைபெற்று வருவதை மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அப்பகுதியில்‌ புதிதாக மழைநீர்‌ வடிகால்‌ அமைக்க உரிய திட்ட மதிப்பீடு தயார்‌ செய்ய சம்பந்தப்பட்ட பொறியாளருக்கு அறிவுறுத்தினார்‌.



இதேபோல், கோவை மேற்கு மண்டலம்‌ வார்டு எண்‌.34க்குட்பட்ட சிவாஜி காலனியில்‌ ரூ.28 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ கட்டப்பட்டுள்ள நகர்ப்புற நலவாழ்வு மையத்தை மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ நேரில்‌ சென்று பார்வையிட்டு, பணியினை விரைவாகவும்‌, தரமாகவும்‌ செய்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட பொறியாளருக்கு அறிவுறுத்தினார்‌.

Newsletter

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...