நாங்குநேரியில் பள்ளி மாணவன் மீதான ஜாதிவெறி தாக்குதல் சம்பவம் - சமத்துவத்தை வலியுறுத்தி அரசு கல்லூரி மாணவர்கள் மனிதசங்கிலி!

நாங்குநேரியில் பள்ளி மாணவன் மீதான ஜாதிவெறி தாக்குதல் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், கோவை அரசு கலை கல்லூரி மாணவர்கள் சமத்துவத்திற்கான மனித சங்கிலி என்ற தலைப்பில் மனித சங்கிலியாக நின்று சமத்துவத்தை வலியுறுத்தினர்.




கோவை: நாங்குநேரியில் பள்ளி மாணவன் மீதான ஜாதிவெறி தாக்குதலை தொடர்ந்து, கோவையில் அரசு கல்லூரி மாணவர்கள் மனித சங்கிலியாக நின்று சமத்துவத்தை வலியுறுத்தினர்.



திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் கடந்த ஒன்பதாம் தேதி ஜாதி ரீதியிலான வன்மத்துடன் பள்ளி மாணவர் ஒருவரை சக மாணவர்கள் அரிவாளால் வெட்டிய சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.



இந்நிலையில் பள்ளி கல்லூரிகளில் மாணவர்களிடையே சாதிய வேறுபாடுகளை கலைந்து ஒற்றுமை உணர்வை சமத்துவ சகோதர உணர்வை வளர்த்தெடுக்கும் வண்ணம் கோவை அரசு கலை கல்லூரி மாணவர்கள் சமத்துவத்திற்கான மனித சங்கிலி என்ற தலைப்பில் மனித சங்கிலியாக நின்று சமத்துவத்தை வலியுறுத்தினர்.



இதில், சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் அரசு கலைக் கல்லூரி வாசல் முன்பு வரிசையாக நின்று சாதி மதம் இனம் மொழி பாலின வேறுபாடு இன்றி வேற்றுமை உணர்வை தகர்க்க வலியுறுத்தினர்.



மேலும் இதில் நாங்குநேரி சம்பவத்தை கண்டித்து கண்டன முழக்கங்களும் எழுப்பப்பட்டன. இந்த மனித சங்கிலி ஏற்பாடு இந்திய மாணவர் சங்கம் சார்பில் இன்று மாநிலம் முழுவதும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...