இளைஞர் காங்கிரஸ் சார்பில் ‘சக்தி சூப்பர் பெண்’ என்ற புதிய திட்டத்தின் பதாகை வெளியீடு!

கோவை காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள 'சக்தி சூப்பர் பெண்' (SHAKTHI SUPER SHE) என்ற திட்டத்தின் பதாகையை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸின் மாநில பொதுச் செயலாளர் ஸ்ரீநிதி பிரேம் வெளியிட்டார்.



கோவை: 'சக்தி சூப்பர் பெண்' என்ற திட்டத்தின் பதாகையை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸின் மாநில பொதுச் செயலாளர் ஸ்ரீநிதி பிரேம் வெளியிட்டார்.

இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள "சக்தி சூப்பர் பெண்" (SHAKTHI SUPER SHE) என்ற திட்டத்தின் பதாகை கோவை காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் வெளியிடப்பட்டது.



இந்த நிகழ்வில் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸின் மாநில பொதுச் செயலாளர் ஸ்ரீநிதி பிரேம் பதாகை வெளியிட்டார்.



மாநகராட்சி வார்டு உறுப்பினர்கள் காயத்ரி ராஜ முரளி சாந்தாமணி பச்சைமுத்து முன்னிலையில் வைத்தனர்.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸின் மாநில பொதுச் செயலாளர் ஸ்ரீநிதி பிரேம் செய்தியாளர்களிடம் கூறியதாவது,



காங்கிரஸ் கட்சியில் பெண்களின் ஆளுமை திறனை வெளிப்படுத்தும் விதமாகவும், அவர்களின் தலைமை பண்பை மேம்படுத்தும் விதமாகவும், சூப்பர் சக்தி சூப்பர் பெண் என்ற இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் காங்கிரஸ் கட்சியில் உள்ள மகளிர் மட்டுமின்றி கட்சியில் இல்லாத பெண்களும் இணையலாம்.

இந்நிகழ்ச்சியில் தேசிய இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...