மாலைநேரத்தில் மலைப்பாதையில் உலாவிய இரண்டு காட்டு யானைகள் – மக்கள் வெளியிட்ட வீடியோ காட்சிகள் வைரல்

கோவை பெரிய தடாகம் அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையில் நேற்று மாலை இரண்டு யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி கோவிலுக்கு செல்லக்கூடிய மலை பாதையை கடந்து அருகில் உள்ள வனப் பகுதிக்குள் சென்றது. இதனை அங்கிருந்தவர்கள் வீடியோவாக எடுத்து பதிவிட்டுள்ளனர். இந்த காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.



கோவை: பெரிய தடாகம் அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையில் நேற்று மாலையில் இரண்டு யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி அருகில் உள்ள வனப் பகுதிக்குள் சென்றன.

இந்த நேரத்தில் பக்தர்கள் நடைபணமாக செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால் அசாம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

கோவை மாவட்டம் மாங்கரை அடுத்துள்ள பெரிய தடாகம் பகுதியில் தற்போது யானைகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. கோடை வெயில் தனிந்த நிலையில் கேரள வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானைகள் தமிழக வனப்பகுதியை ஒட்டியுள்ள மாங்கரை பெரிய தடாகம், பகுதியை ஒட்டியுள்ள வனப்பகுதியில் தஞ்சமடைந்துள்ளது.

இந்த யானைகள் மருதமலை மற்றும் பெரிய தடாகம், பகுதியில் மாலை நேரங்களில் வனப்பகுதியில் இருந்து வெளியேறி அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து வருகிறது.



இந்நிலையில் பெரிய தடாகம் அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையில் நேற்று மாலை சுமார் 5.30 மணி அளவில் இரண்டு யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு செல்லக்கூடிய மலை பாதையை கடந்து அருகில் உள்ள வனப் பகுதிக்குள் சென்றன.



இதனை அங்கிருந்தவர்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது. மாலை நேரம் என்பதால் உணவு மற்றும் தண்ணீர் தேடி இந்த யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியே வர துவங்கி இருக்கலாம் எனவும் பக்தர்கள் மாலை 4 மணிக்கு மேல் மலை பாதை வழியாக நடந்து செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளதாகவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Newsletter

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...