மாற்றுத்திறனாளிகள் வேலை வாய்ப்பு முகாம் - 245 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கினார் மாவட்ட ஆட்சியர்..!

கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் தகுதியுள்ள 245 மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பணி நியமன ஆணை வழங்கினார்.


கோவை: மாற்றுத்திறனாளிகள் வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்ற 483 பேரில் 245 பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பணி நியமன ஆணை வழங்கினார்.

கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள வெங்கடலட்சுமி திருமண மண்டபத்தில் மாவட்ட நிர்வாகம், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் ஷேசயர் தன்னார்வ அமைப்பு இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்தியது.

இதில் கோவை மாவட்டத்தை சேர்ந்த 37க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்று மாற்றுத்திறனாளிகளை தேர்வு செய்ய வந்தன.

இம்முகாமில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் சார்பில் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிகளுக்கான பதிவு, மாவட்ட தொழில் மையத்தின் தொழில் முனைவோர்களுக்கான ஆலோசனை, மாவட்ட முன்னோடி வங்கியின் வாயிலாக வங்கி கடன் வழிகாட்டுதல்கள் ஆகியவை அமைக்கப்பட்டிருந்தன. முகாமில் மொத்தம் 483 மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர்.

இதில், 245 மாற்றுத்திறனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் அனைவருக்கும் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பணி நியமன ஆணையை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...