திருப்பூரில் தையல் இயந்திர கண்காட்சி - தானாகவே துணி தைக்கும் அதிநவீன தையல் இயந்திரம் அறிமுகம்!

திருப்பூரில் நடைபெற்ற தையல் இயந்திர கண்காட்சியில் டெய்லர் இல்லாமல் தானாகவே துணி தைக்கும் அதிநவீன தையல் இயந்திரம் அறிமுகம் செய்யபட்ட நிலையில், உதவியாளர்களே இயக்க முடியும் என்பதால், ஆட் பற்றாக்குறைக்கு இது தீர்வாக அமையும் என தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.



திருப்பூர்: திருப்பூரில் நடந்து வரும் தையல் இயந்திர கண்காட்சியில் டெய்லர் இல்லாமல் தானாகவே துணி தைக்க கூடிய அதிநவீன தையல் இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் பனியன் ஏற்றுமதி செய்கின்ற திருப்பூர் நகரில், ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட பனியன் நிறுவனங்கள் இருக்கின்றன. இங்கு தயாரிக்கப்படும் பனியன் உள்ளாடைகள் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பின்னலாடைகள் உலகம் முழுமைக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றது.

இந்த பனியன் ஏற்றுமதிக்கான உற்பத்தி மற்றும் உள்நாட்டு உற்பத்திக்கான தொழிற்சாலைகளில், சுமார் 10 லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிகிறார்கள். இதில் வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்ட தொழிலாளர்கள் லட்சக்கணக்கில் பணிபுரிகிறார்கள்.

ஆனாலும் திருப்பூர் தொழில் துறையினரின் ஆட்கள் பற்றாக்குறை என்பது தீர்ந்தபாடாக இல்லை. இந்த ஆட்கள் பற்றாக்குறைக்கு தீர்வு காண்பது திருப்பூர் தொழில்துறையினருக்கு தீராத பிரச்சனையாகவே இருந்து வருகிறது.

புலம் பெயர் தொழிலாளர்கள் எடுக்கக்கூடிய தொடர் விடுமுறைகள், சொந்த ஊருக்கு செல்வது போன்ற காரணங்களால் திருப்பூர் பனியன் தொழிலில் ஒவ்வொரு நிறுவனத்திலும் சுமார் 40 சதவீத அளவில் எல்லா காலங்களிலுமே ஆட்கள் பற்றாக்குறை இருக்கிறது.



இந்த ஆட்கள் பற்றாக்குறைக்கு தீர்வு ஏற்படுத்தும் விதமாக திருப்பூரில் நடந்த தையல் இயந்திர கண்காட்சியில் டெய்லர் இல்லாமல் தைக்கக்கூடிய அதிநவீன தையல் இயந்திரம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.



பனியன் மற்றும் டீ சர்ட் தயாரிப்பில் கை டவர், பாடி டவர், பாக்கெட் வைப்பது போன்ற பணிகளை தானாகவே மேற்கொள்ளும் பேட்லாக் தையல் இயந்திரம் காட்சிப்படுத்தி விளக்கப்பட்டது. துணிகளை கன்வேயரில் வைத்தால் தானாகவே மடித்து தைத்து பின்னர் அடுக்கி தருகிறது இந்த இயந்திரம்.



அதேபோல தானாகவே பாக்கெட் பொருத்தக்கூடிய தையல் இயந்திரமும் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த இயந்திரங்களை திருப்பூர் சார்ந்த தொழில்துறையினர் ஆர்வத்துடன் பார்த்துச் சென்றார்கள்.

இது குறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்க தலைவர் முத்துரத்தினம் கூறியதாவது, அதி நவீன இயந்திரங்களின் வருகையால் ஆற்றல் பற்றாக்குறைக்கு பெரும் தீர்வு ஏற்படும் என்று நம்புகிறோம் என்றார்.

இதேபோல், கான்சாய் நிறுவனத்தின் இந்திய தலைமை அதிகாரி பிரவீன் குமார் கூறியதாவது, இயந்திரங்களில் பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி இருக்கிறோம்.

தற்போது பேட்லாக் இயந்திரங்களில் கை டவர் மற்றும் பாடி டவர் போன்றவற்றை தானாகவே வைக்கும் இயந்திரங்களை உருவாக்கி அதை திருப்பூர் கண்காட்சியில் காட்சிக்கு வைத்து இருக்கிறோம். சாதாரணமாக 1500 பீஸ்கள் தயாரிக்க கூடிய இடத்தில் இந்த நவீன தானியங்கி தையல் இயந்திரங்கள் மூலமாக 2500 முதல் 3000 பீஸ்கள் தயாரிக்க முடியும்.

டெய்லர் இல்லாமல் உதவியாளரே இந்த மிஷின்களை இயக்க முடியும். இது தவிர ஓவர் லாக் மற்றும் பிளாட் லாக் இயந்திரங்களில் சென்சார்களுடன் கூடிய அதிநவீன வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சாதாரண உதவியாளர்களே இந்த மெஷின்களை இயக்க முடியும். எனவே திருப்பூரில் ஆட்கள் பற்றாக்குறைக்கு இந்த இயந்திரங்கள் தீர்வாக அமையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...