மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு பாதுகாப்பளித்த மனிதநேயமிக்க கோவை மக்கள்


கோவை சக்தி- விளாங்குறிச்சி சாலையில் இன்று காலை சுமார் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் மனநலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், சரிவர ஆடைகளற்று சாலையில் சுற்றித்திரிந்தார்.



அவரைக் கண்ட இந்தியன் பப்ளிக் பள்ளி, கௌமரம் பிராஷ்த்தி சிறப்புப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் சிடிஎஸ் நிறுவனத்தில் பணிபுரியும் பாலா ஆகியோர் தங்களிடம் இருந்த ஆடைகளை மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணின் மீது போர்த்தி அவருக்கு பாதுகாப்பு அளித்துள்ளனர். மேலும், காவல் துறையினருக்கும், 108 ஆம்புலன்ஸ் சேவைக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.



அங்கு வந்த ஆம்புலன்ஸ் மருத்துவர்கள் மனநலம் பாதிக்கப்பட்டவருக்கு காயங்கள் ஏதுமில்லை என அறிந்து அவரை அங்கேயே விட்டுச்சென்றனர்.



இதனிடையே, இதுகுறித்தான தகவல் ஈரநெஞ்சம் அறக்கட்டளை மற்றும் நம்ம கோவை வாட்ஸ்அப் குழுவில் பரவ அங்கு வந்த ஈரநெஞ்சம் அறக்கட்டளை மகேந்திரன் அப்பெண்ணை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். தொடர்ந்து அப்பெண்ணை ஈரநெஞ்சம் அறக்கட்டளையிலேயே பராமரிக்கவும் திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

முன் ஒரு காலத்தில் நாம் அன்றாடம் பயணிக்கும் சாலையிலேயே மனநலம் பாதிக்கப்பட்டோ, உடல்நிலை பாதிக்கப்பட்டோ யார் இருந்தாலும் அதனை பொருட்படுத்தாமல் கடந்துசெல்வது வழக்கம். ஆனால், தற்போது மக்கள் மத்தியில் மனிதநேயமானது வளர்ந்துள்ளது என்பதற்கு கோவையில் நடைபெற்றுள்ள இச்சம்பவம் எடுத்துக்காட்டாகவே உள்ளது.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...