ஈஷா யோகா மையத்தில் குளித்த போது கல்லூரி மாணவர் பலி


கோவை மாவட்டம், வெள்ளியங்கிரி மலையடிவாரப் பகுதியில் அமைந்துள்ளது ஈஷா யோகா மையம். இங்கே, மெர்க்குரி உள்ளிட்ட பாதரசங்களால் ஆன சிலை அடங்கிய சூரிய குண்டம் என்னும் நீராடும் பகுதியில் குளித்த கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் சக மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.



திருவண்ணாமலை மாவட்டம், கோட்டை மேடு பகுதியைச் சேர்ந்த மன்னார்சாமி என்பவரது மகன் ரமேஷ் (21). வேலூர் பகுதியில் தனியார் கல்லூரி ஒன்றில் சிவில் இன்ஜினியரிங் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.

இந்நிலையில், சகமாணவர் அனைவரும் இணைந்து உதகைக்கு சுற்றுலா செல்வதற்காக திட்டமிட்டுள்ளனர். அதன்படி இன்று காலை உதகை செல்லும் முன்பாக வெள்ளியங்கிரி மலையடிவாரப் பகுதியில் உள்ள ஈஷா யோகா மையத்திற்கு சென்றுள்ளனர். 

அங்கு, சூரிய குண்டம் என்னும் நீராடும் பகுதியில் மாணவர்கள் குளித்துக்கொண்டிருந்த நிலையில் ரமேஷ்-க்கு அதிகப்படியான குளிரின் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து, அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக கோவை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். ஆனால், பொது மருத்துவமனை செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தற்போது உயிரிழந்த மாணவரின் உடல் கோவை அரசு பொது மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆலந்துரை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சுற்றுலாவிற்காக ஈஷா யோகா மையத்திற்கு வந்த மாணவர் உயிரிழந்த சம்பவம் சகமாணவர்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...