உடுமலை மலைகிராமங்களில் மருத்துவ விழிப்புணர்வு நிகழ்ச்சி!

உடுமலை அருகேயுள்ள பொறுப்பாறு மலைகிராமத்தில் எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளை, மாவட்ட நக்சல் பிரிவு மற்றும் சாய் ஸ்பீச், ஹியரிங் எய்ட் சென்டர் இணைந்து, காது கேளாதோருக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் ஏராளமான மலைகிராம மக்கள் பங்கேற்று, பரிசோதனை மேற்கொண்டனர்.


திருப்பூர்: உடுமலை அடுத்த பொறுப்பாறு மலைக்கிராமத்தில் நடைபெற்ற காது கேளாதோருக்கான சிறப்பு மருத்துவ முகாமில் ஏராளமான மக்கள் பங்கேற்று பரிசோதனை மேற்கொண்டனர்.



திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வட்டம் பொறுப்பாறு மலைக்கிராம மக்களுக்கு எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளை, திருப்பூர் மாவட்டம் நக்சல் தடுப்பு பிரிவு மற்றும் சாய் ஸ்பீச் & ஹியரிங் எய்ட் சென்டர் உடன் இணைந்து நடத்தும் காது கேளாமை சம்பந்தப்பட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.



இதில் நக்சல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் ரவி தலைமை வகித்தார் மேலும் காது பரிசோதனை நிபுணர். கார்த்திக் காது பற்றிய விழிப்புணர்வுகளை வழங்கினார். ‍‌‌‍‌‍‌‌எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளையின் நிறுவனர் முனைவர் திரு நெல்சன் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பற்றி சிறப்புரையாற்றினார்,



இந்த நிகழ்வில், எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளை உறுப்பினர் சிவலிங்கம் மற்றும் திருப்பூர் மாவட்டம் நக்சல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த முகாமில் பொறுப்பாறு மலை கிராம மக்கள் பரிசோதனை செய்து கொண்டு பயன் பெற்றனர்.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...