பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணைகள் கட்டுவதை கடுமையாக ஆட்சேபனை செய்வதாக திருநாவுக்கரசர் பேட்டி

தமிழகம்- கேரள மாநிலத்திற்கு இடையே பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டும் திட்டத்திற்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி கடுமையான ஆட்சேபனைகளை தெரிவித்துக்கொள்வதாக அக்கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, ஆர்.கே.நகரில் கடந்த முறை கூட்டணி கட்சியான தி.மு.க போட்டியிட்டது எனவும் தற்போது ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் குறித்து தி.மு.க உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுடன் பேசி முடிவு செய்யப்படும் எனவும் தி.மு.க கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கின்றது எனவும் தெரிவித்தார்.

அதிமுக கட்சியானது மூன்று அணிகளாக பிரிந்து கிடக்கின்றது எனவும் மக்களிடம் வாக்கு கேட்டு செல்லும் போது தங்கள் அணிக்கு மக்களிடம் வரவேற்பு கிடைக்கும் எனவும் திருநாவுக்கரசர் தெரிவித்தார்.

மேலும், இடைத்தேர்தலில் ராகுல் காந்தி, சோனியா காந்தி போன்ற தலைவர்கள் பிரச்சாரம் செய்ய வாய்ப்பில்லை எனவும் தெரிவித்தார்.

இராமேஸ்வரத்தில் இறந்த மீனவர் குடும்பத்தை சந்தித்து பேசியதாக தெரிவித்த அவர், கடந்த கால பேச்சுவார்த்தைகளை  இலங்கை அரசு பின்பற்றவில்லை எனவும் கடந்த 3 ஆண்டுகளில் 135 படகுகளை கைப்பற்றிய இலங்கை அரசிடம் இருந்து இது வரை எந்த ஒரு படகினையும் மீனவர்களுக்கு இந்திய அரசு மீட்டுக்கொடுக்கவில்லை எனவும் தமிழக மீனவர்கள் ஏமாற்றப்பட்டு இருக்கின்றனர் எனவும் தெரிவித்தார்.

மீனவர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில், சுஷ்மா சுவராஜ் அல்லது மூத்த அமைச்சர்கள் டெல்லியில் இருந்து வர வேண்டும் என்பதில் போராட்டத்தில் இருப்பவர்கள் உறுதியாக இருக்கின்றனர் எனவும், இந்திய தண்டணை சட்டப்படி மீனவர் மீது துப்பாக்கியால் சுட்ட இலங்கை கடற்படை வீரர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

இறந்த மீனவர் குடும்பத்தினருக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் ஒரு லட்ச ரூபாய் வழங்கப்பட்டு இருப்பதாகவும், மத்திய, மாநில அரசுகள் இறந்த மீனவர் குடும்பத்தினருக்கு 25 லட்ச ரூபாய் கொடுக்க வேண்டும் எனவும் இலங்கை அரசிடமிருந்து ஒரு கோடி நஷ்ட ஈடு பெற்று பாதிக்கப்பட்ட மீனவர் குடும்பத்தினருக்கு வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணைகள் கட்டுவதை கடுமையாக ஆட்சேபனை செய்வதாக தெரிவித்த அவர், தமிழக அரசின் எதிர்ப்பை மீறி அணைகள் கட்டப்படுவதை மத்திய அரசு தடுக்கவேண்டும் எனவும் கேரள அரசை கண்டித்து வரும் 12ம் தேதி நடைபெறும் போராட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்க இருப்பதாகவும் தெரிவித்தார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா இல்லாமல் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முயற்சிக்க வேண்டும் எனவும், உள்ளாட்சித் தேர்தலை விரைவில் நடத்த தமிழக தேர்தல் ஆணையமும், தமிழக அரசும் முன்வர வேண்டும் எனவும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் வலியுறுத்தினார்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...