பாமக நிறுவனர் ராமதாஸ் 85வது பிறந்தநாள் - உடுமலையில் பாமக சார்பில் கொடியேற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்!

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸின் 85 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு திருப்பூர் மேற்கு மாவட்ட பாமக சார்பில் உடுமலை உள்பட 10க்கும் மேற்பட்ட பகுதிகளில் கட்சி கொடியை ஏற்றி கட்சியினர் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி உற்சாகமாக கொண்டாடினர்.



திருப்பூர்: பாமக நிறுவனர் ராமதாஸ் 85வது பிறந்தநாளை முன்னிட்டு உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில் பாமக சார்பில் கொடியேற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் 85 ஆவது பிறந்த நாளை நேற்றைய தினம் கொண்டாடினார்.



இதனை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் அக்கட்சி பிரமுகர்கள் கட்சி கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்.



இதன் ஒரு பகுதியாக திருப்பூர் மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட உடுமலை, மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிகளில் கிழவன் காட்டூர், குமரலிங்கம், எளைய முத்தூர், வாளவாடி உட்பட பத்துக்கு மேற்பட்ட இடங்களிலும் கொண்டாடப்பட்டது.



இந்த நிகழ்வில், பாமக கொடி ஏற்றியும் மரக்கன்றுகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடப்பட்டது.



இதில், திருப்பூர் மேற்கு மாவட்ட செயலாளர் இரா.பழனிச்சாமி, மாவட்டத் தலைவர் சிங்காரவேல், உழவர் பேரியக்க மாவட்ட செயலாளர் பழனிச்சாமி ,உடுமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் சிவபாலு மாவட்ட ஊடக பேரவை செயலாளர் கனகராஜ், பணிக்குழு செயலாளர் மருத முத்து, மாவட்ட அன்புமணி தம்பிகள் படை தலைவர் மகாலிங்கம்,ஓன்றிய தேர்தல் பணிக்குழு செயலாளர் காளிமுத்து, ஓன்றிய அன்பு மணி தம்பிகள் படை செயலாளர் சாமிநாதன், ஓன்றிய கொள்கை விளக்க அணி செயலாளர் குமார் என்கிற சிவக்குமார், மாவட்ட கொள்கை விளக்க அணி செயலாளர் ராமலிங்கம் அன்புமணி தம்பிகள் படை வெங்கடேஷ், கோபாலகிருஷ்ணன், ரவிச்சந்திரன், நந்தகோபால், பாலகிருஷ்ணன், முத்துக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...