மடத்துக்குளத்தில் நெருப்பில்லா சமையல் போட்டி - உற்சாகத்துடன் பங்கேற்ற மாணவர்கள்!

மடத்துக்குளம் வட்டாரத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தின் போஷன் அபியான் திட்டத்தின் மூலம் நடைபெற்ற நெருப்பில்லா சமையல் போட்டியில் 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்கள் உற்சாகத்துடன் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தி பரிசுகளை வென்றனர்.


திருப்பூர்: மடத்துக்குளம் பகுதியில் நடைபெற்ற அடுப்பில்லா சமையல் போட்டியில் 60க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டாரத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தின் போஷன் அபியான் திட்டத்தின் மூலமாக வளர் இளம்பருவத்தினர்கான நெருப்பில்லா சமையல் போட்டி மடத்துகுளம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மடத்துக்குளம் வட்டாரத்தில் உள்ள 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்கள் 60-க்கும் மேற்பட்டோர் போட்டியில் கலந்து கொண்டு தங்கள் படைப்புகளை கொடுக்கப்பட்ட 25 நிமிடங்களில் செய்து காட்டினர்.

இந்நிகழ்வை மடத்துக்குளம் வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் செல்வி.வேளாங்கண்ணி தலைமை தாங்கி நடத்தினார்.



எண்ணம்போல் வாழ்க்கை அறக்கட்டளை நிறுவனர் நெல்சன் போட்டியில் பங்கேற்ற மாணவ மாணவிகளுக்கு மரக்கன்று மற்றும் எழுதுபொருட்கள் பெட்டகங்களை பரிசாக வழங்கினார்.



பள்ளி துணை தலைமையாசிரியர் ஜெயசந்திரன் சிறப்புரை வழங்கினார். நிகழ்விற்கான ஏற்பாடுகளை வட்டார ஒருங்கிணைப்பாளர் கௌதமன் செய்திருந்தார்.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...