கோவை மாநகராட்சியுடன் சிஐஐ மற்றும் ஐஜிபிசி இணைந்து மின்சார பற்றாக்குறை தீர்ப்பது குறித்து கருத்தரங்கம் நடைபெற்றது

கோவையில் ஏற்பட்டுள்ள மின்சார பற்றாக்குறையினை தீர்ப்பது குறித்து கோவை மாநகராட்சியுடன் சிஐஐ மற்றும் ஐஜிபிசி இணைந்து பில்டிங் எபிசியன்சி எக்சலரேட்டர் என்னும் பயிலரங்கை நடத்தியது.

தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தின் தலைமைப் பொறியாளர் டி.ஆல்துரை இக்கருத்தரங்கில் பேசும்போது, பசுமை கட்டிட இயக்கத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு சிஐஐ மற்றும் ஐஜிபிசி-க்கு பாராட்டுக்களைத் தெரிவித்தார். கோவை மாநகராட்சியில் ஒரு மெகா வாட் அளவிற்கு மின்சாரப் பயன்பாட்டினை குறைத்ததற்காக பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

ஆல்துரை தனது உரையில் மேலும் பேசுகையில், இந்த தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் உற்பத்தி செய்யும் மின்சாரத்தில் 37 சதவிகிதம் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்களில் இருந்து உற்பத்தி செய்யப்படுகிறது. வரும் காலங்களில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்களில் இருந்து உற்பத்தி செய்யும் மின்சார அளவை அதிகரிக்கக்கத்திட்டமிட்டுள்ளது என்று கூறினார்.

சிஐஐ கோவை கிளையின் துணைத் தலைவர் எம்.ரமேஷ் பேசுகையில், கோவையில் தற்பொழுது 35 ஐஜிபிசி சான்று பெற்ற உலகத்தரம் வாய்ந்த திட்டங்கள் ஐடி பார்க், தொழிற்சாலைகள், பள்ளிகள், குடியிருப்புகள் மற்றும் அலுவலகங்கள் ஆகியவற்றில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கோவை மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் ஆகியோறின் ஒத்துழைப்பால் இந்த கருத்தரங்கம் ஒரு மிகப்பெரிய இயக்கமாக மாறும். இது கோவையை செழுமைமிக்கதாகவும், ஆரோக்கியமானதாகவும் மாற்றும் என்றார்.

ஐஜிபிசி கோவை மாவட்டத் தலைவர் ராஜேஸ் பி லுன்டு பேசுகையில், இன்று நடைபெற்ற இப்பயிலறங்கில் கோவை மாநகராட்சி சார்பாகவும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் சார்பாகவும் பல்வேறு அதிகாரிகள் பங்கேற்றதற்காக வாழ்த்துக்களைத் தெரிவித்தார். இது கோவையைச் சேர்ந்த அதிகாரிகளின் அர்ப்பணிப்பை காட்டுகிறது. கோவை மாநகராட்சி ஆணையர் க.விஜயகார்த்திகேயன் அளித்த ஒத்துழைப்புகள் குறித்தும், கோவையை செழுமைமிக்கதாக மாற்றும் முயற்சியில் அவருடைய அர்ப்பணிப்பும் குறித்து அவர் எடுத்துரைத்தார்.

Newsletter

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...