மூலனூர் அருகேயுள்ள நடைபாதையை மீட்டுத்தரக்கோரி தாராபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் விசிக சார்பில் மனு!

தாராபுரத்தை அடுத்த மூலனூர் பகுதியில் நடைபாதையை மீட்டு தரவும், பல ஆண்டுகளாக குடியிருந்து வரும் மக்களுக்கு பட்டா வழங்க வலியுறுத்தியும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தாராபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.



திருப்பூர்: தாராபுரம் அடுத்த மூலனூர் பகுதியில் நடைபாதையை மீட்டு தர வலியுறுத்தி, வட்டாட்சியர் அலுவலகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.



திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த மூலனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட சாணார் பாளையம் ஏசு வீதியில், பல ஆண்டுகளாக பொதுமக்கள் பயன்படுத்தி வந்த வழித்தடத்தை முத்துவேல் என்பவர், ஹாலோ பிளாக் கல்லால் காம்பவுண்ட் சுவர் எழுப்பி வலியை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள இந்த பாதையை முத்துவேல் ஆக்கிரமிப்பு செய்து கொண்டு அடியாட்களை வைத்து பொதுமக்களை மிரட்டி வருவதாகவும், பொதுமக்கள் அவ்வழியாக செல்ல முடியாமல் மிகவும் சிரமத்திற்கு உள்ளாவதாகவும் கூறுகின்றனர்.

மேலும் மூலனூர் சாணார் பாளையம், ஏசு வீதி ஆகிய பகுதியில் அனைத்து தரப்பு மக்களும் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். இவர்கள் குடியிருக்கும் வீட்டிற்கு பட்டா இல்லாத காரணத்தினால் அடிப்படை வசதிகள் எதுவும் பெற முடியாத சூழலில் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.



எனவே உடனடியாக தனி நபர் ஆக்கிரமிப்பு செய்துள்ள பொது வழித்தடத்தை மீட்க வேண்டும் என்றும், அரசுக்கு சொந்தமான இடத்தில் பல ஆண்டுகளாக வீடு கட்டி வாழ்ந்து வருபவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும். என விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தாராபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

Newsletter

இடையர்பாளையத்தில் காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு கூட்டம்

கோவை மாநகர் மாவட்டம் கவுண்டம்பாளையம் சர்க்கிள் கமிட்டி சார்பாக இந்திய தேசிய காங்கிரஸ் மறு சீரமைப்பு இயக்கத்தின் எஸ் எஸ்...

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...