பல்லடம் - தாராபுரம் சாலை விரிவாக்க திட்டத்தில் சாலையோர மின்கம்பங்களை அகற்றாமல் சாக்கடை கால்வாய் அமைப்பதற்கு பொதுமக்கள் கண்டனம்!

பல்லடம் - தாராபுரம் இடையேயான சாலை விரிவாக்க திட்டத்தில் சாலையோரம் உள்ள மின்கம்பங்களை அகற்றாமல் பணிகள் நடைபெற்று வருவதால் பேரிடர் காலங்களில் ஆபத்து நிகழ வாய்ப்புள்ளதாக கூறியுள்ள பொதுமக்கள், மின்கம்பங்களை அகற்றிவிட்டு சாக்கடை கால்வாய் அமைக்க வேண்டும் என மாநில நெடுஞ்சாலை துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.



திருப்பூர்: பல்லடம் - தாராபுரம் சாலை விரிவாக்கத் திட்டத்தில் சாலையோர மின் கம்பங்களை அகற்றிவிட்டு கழிவு நீர் கால்வாய் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாராபுரம் மாநில நெடுஞ்சாலையானது பல்வேறு கட்டங்களாக விரிவாக்கம் செய்யும் பணி பல்வேறு நிறுவனங்களால் ஒப்பந்த முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பல்லடம் - தாராபுரம் சாலை விரிவாக்க பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.



இதனிடையே, சாலையோரங்களில் ஏற்கனவே மின்வாரியத்தால் அமைக்கப்பட்டிருந்த ரோட்டோர மின்கம்பங்களை கவனிக்காமல் சாலை விரிவாக பணியின் போது ரோட்டோரம் மின் கம்பங்களை அப்படியே நடுவில் வைத்து இருபுறமும் கழிவுநீர் சாக்கடை செல்லும் கால்வாயானது அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.



இது குறித்து சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கூறியதாவது, மழை, சூறாவளி காற்று போன்ற பேரிடர் காலங்களில் தற்போது நடைபெற்று வரும் சாலை விரிவாக்க பணியின் போது சாக்கடை கழிவுநீர் வாய்க்காலின் நடுப்பகுதியில் வைத்துள்ளதால் ரோட்டோர மின்கம்பங்கள் விழுந்து விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்பு மற்றும் உடைமைகளை இழக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

எனவே உடனடியாக நகராட்சியும், மாநில நெடுஞ்சாலை துறையினரும், மின்சார வாரியமும் இணைந்து போர்க்கால அடிப்படையில் உயிருக்கு அச்சுறுத்தலாக உள்ள சாக்கடை கால்வாய் நடுவில் உள்ள ரோட்டோர மின்கம்பங்களை அகற்ற வேண்டும் என்பது ஒட்டுமொத்த மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...