உடுமலை மலை கிராமங்களை இணைக்க 3 மாதத்தில் சாலை - மாவட்ட ஆட்சியர் உறுதி!

உடுமலை வனப்பகுதியில் உள்ள மலைக்கிராமத்தை சேர்ந்த பழனிசாமி என்பவர் சாலை வசதி இல்லாததால், மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாமல் உயிரிழந்த நிலையில், இன்னும் 3 மாதத்தில் மலைக்கிராமங்களை இணைக்க சாலை அமைக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.



திருப்பூர்: உடுமலை மலை கிராமங்களை இணைக்க 3 மாதத்தில் சாலை அமைக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கிருஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

உடுமலை வன குடியிருப்பு பகுதியை சேர்ந்த பழனிச்சாமி என்பவர் உடல்நலம் குன்றியதால் மலைவாழ் மக்கள் தொட்டில் கட்டி 5 கிலோ மீட்டர் தூரம் அவரை சுமந்து சென்று மருத்துவமனையில் சேர்த்தனர். எனினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிருஸ்துராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

உடுமலை வனப்பகுதியில் உள்ள மலைவாழ் மக்களுக்காக 5 கிலோ மீட்டர் சாலை அமைக்க கடந்த வாரம் உத்தரவாதம் அளிக்கப்பட்டு உள்ளது. சாலை அமைக்க டென்டர் கோரப்பட்டுள்ளது.

மூன்று மாதங்களில் சாலை வசதி செய்து தரப்படும். மேலும் இந்த பகுதி தவிர்த்து மற்ற மலை கிராமங்களிலும் தேவையான அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. உயிரிழந்த பழனிச்சாமி குறித்து அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...