சூலூர் அருகே மதுபாட்டில்களை சட்டவிரோதமாக பதுக்கி விற்பனை செய்த தாய், மகன் கைது!

சூலூர் அடுத்த அப்பநாயக்கன்பட்டியில் டாஸ்மாக் மதுபானங்களை வாங்கி வந்து வீட்டில் பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்து வந்த பூவாத்தாள் மற்றும் அவரது மகன் குமாரசாமி ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.



கோவை: சூலூர் அருகே சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்து வந்த தாய் மற்றும் மகனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள அப்பநாயக்கன்பட்டியில் டாஸ்மாக் மதுபானங்களை வாங்கி வந்து வீட்டில் பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்வதாக சூலூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் பேரில் சூலூர் காவல் உதவி ஆய்வாளர் மாரிமுத்து சம்பவ இடத்திற்கு சென்று சோதனை மேற்கொண்ட போது, அங்கு டாஸ்மாக் மதுபாட்டில்கள் சீல் உடைக்கப்பட்ட நிலையில் 50க்கும் மேற்பட்ட பாட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அவற்றை அதிக விலைக்கு விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.



அதை தொடர்ந்து கள்ள சந்தையில் மது விற்பனை செய்ததாக அப்பநாயக்கன்பட்டியை சேர்ந்த பூவாத்தாள் மற்றும் அவரது மகன் குமாசாமி ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.



மேலும், அவர்களிடமிருந்து 58 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 நிகழ்ச்சி: UPSC வெற்றியாளர் சிறப்புரை

கோவை, ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செப்டம்பர் 9, 2026 அன்று நடைபெற்ற YUVA 2026 – Freshmen In...

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...