பன்னிமடை அரசு பள்ளி மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கிய கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ!

துடியலூர் அடுத்த பன்னிமடை அரசு மேல்நிலை பள்ளியில் 6 முதல் 12ம் வகுப்பில் முதலிடம் பிடித்த 21 மாணவர்களுக்கு, பெருந்தலைவர் காமராஜர், முன்னாள் எம்.எல்.ஏ தியாகி வெ.எல்லமநாயுடு பொதுநல அறக்கட்டளை சார்பில் 10ஆம் ஆண்டாக மாணவ, மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகையை கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ பி.ஆர்.ஜி. அருண்குமார் வழங்கினார்.



கோவை: பன்னிமடை அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகையை கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ பி.ஆர்.ஜி. அருண்குமார் வழங்கினார்.

கோவை துடியலூர் அடுத்த பன்னிமடை அரசு மேல்நிலை பள்ளியில் பெருந்தலைவர் காமராஜர், முன்னாள் எம்.எல்.ஏ தியாகி. வெ.எல்லமநாயுடு பொது நல அறக்கட்டளை சார்பில் 10ம் ஆண்டு கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியை சித்ரா அனைவரையும் வரவேற்று பேசினார். அறக்கட்டளை தலைவர் ஆறுமுகசந்திரமோகன் தலைமை தாங்கினார். முன்னாள் ஓன்றிய கவுன்சிலர், அறக்கட்டளை பொதுச்செயலாளர் ஆர்.வி.சி. என்.நடராஜன் அறிமுக உரையாற்றினார்.

முன்னாள் தலைமை ஆசிரியர் கவிஞர் இரவீந்திரன் விழாப் பேரூரையாற்றினார்.



சிறப்பு விருந்தினராக கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் கலந்துக்கொண்டு பள்ளியில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை தமிழ் வழி மற்றும் ஆங்கில வழி கல்வியில் முதல் இடங்களை பெற்ற 21 மாணவ, மாணவிகளுக்கு சுமார் 40 ஆயிரம் மதிப்புள்ள கல்வி ஊக்கத்தொகைகளை வழங்கி மாணவர்களை பாராட்டி பேசினார்.



மேலும் பள்ளி தலைமை ஆசிரியர் உட்பட அனைத்து ஆசிரியர்களும் பாராட்டி கெளரவிக்கப்பட்டனர்.



அறக்கட்டளை கெளரவ தலைவர் முத்துகுமாரசாமி, முன்னாள் எம்.எல்.ஏ சின்னராஜ், முன்னாள் அறக்கட்டளை தலைவர் செல்வராஜ், அறாக்கட்டளை கெளரவ ஆலோசகர் செல்லப்பன் ஆகியோர் காமராஜர் மற்றும் எல்லமநாயுடு திருவுருவ படங்களை திறந்து வைத்தனர்.

தொடர்ந்து அறக்கட்டளை பொருளாளர் ராமச்சந்திரன் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இனிப்புகளை வழங்கினார்.



இந்த விழாவில் அறக்கட்டளை குழுவினை சேர்ந்த அறக்கட்டளை செயலாளர்கள் பேரூர் நாகராஜ், அசோக்குமார், ராமசாமி, கணுவாய் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் பாரதிசெல்வம், அறக்கட்டளை சட்ட ஆலோசகர் வழக்குரைஞர் பழனிச்சாமி, சின்னு ராமகிருஷ்ண, துரைசாமி என்கிற வெங்கிடசாமி, பாலகிருஷ்ணன் மற்றும் ஒன்றியக்குழு தலைவர் நர்மதா துரைசாமி, பன்னிமடை ஊராட்சித்தலைவர் ரத்தினம் பி.எஸ்.எம்.மருதாசலம், துணைத்தலைவர் அருள்குமார், குருடம்பாளையம் ஊராட்சித்தலைவர் டி.ரவி, பி.டி.மோகன்ராஜ், முன்னாள் தலைவர் பாலகிருஷ்ணன், துரைசாமி, சுரேஷ்குமார், முன்னாள் துணைத்தலைவர்கள் ராஜப்பன், தாமோதரன், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் கிருஷ்ணமூர்த்தி, இணை செயலாளர் காளியப்பன், நிர்வாகிகள் சம்பத், மயில்சாமி, எத்திராஜ், சுந்தர்ராஜ், சுரேந்திரன், ராமச்சந்திரன், மருதாசலம், பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் மயில்ராணி, துணை தலைவர் லட்சுமி, அரசு ஆரம்ப பள்ளி பி.டி.ஏ தலைவர் டி.பி.ராஜேந்திரன், கவுன்சிலர் கோபாலசாமி உட்பட கவுன்சிலர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.



Newsletter

கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 அறிமுக நிகழ்ச்சி

ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செப்டம்பர் 8, 2026 அன்று காலை 9.30 மணிக்கு முதலாமாண்டு B.E / B....

பாரத் யூரியா உரம் கேரளாவிற்கு கடத்திய கடை உரிமையாளர் மீது குண்டர் சட்டம் நடவடிக்கை

கோயமுத்தூர் மாவட்டம் மதுக்கரையில் 25 டன் மானிய விலை பாரத் யூரியா உர மூட்டைகளை கேரளா மாநிலத்திற்கு கடத்திச் சென்ற வழக்கில...

மானிய விலை யூரியாவை கேரளாவுக்கு கடத்திய உர கடை உரிமையாளர் குண்டர் சட்டத்தில் கைது

கடலூரைச் சேர்ந்த உர கடை உரிமையாளர் கணேசமூர்த்தி, 25 டன் பாரத் யூரியா உர மூட்டைகளை கேரளாவுக்கு கடத்த முயன்றபோது மதுக்கரைய...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 நிகழ்ச்சி: UPSC வெற்றியாளர் சிறப்புரை

கோவை, ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செப்டம்பர் 9, 2026 அன்று நடைபெற்ற YUVA 2026 – Freshmen In...

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...