சூலூரில் கஞ்சா விற்பனை - வடமாநில தொழிலாளி கைது!

சூலூர் அடுத்த காங்கேயம்பாளையத்தில் தங்கி கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததாக பீகார் மாநிலம் முசாபர் பூர் பகுதியை சேர்ந்த சிவ்குமார் சகானி என்பவரை கைது செய்து, சூலூர் போலீசார் அவரிடம் இருந்த 2 கிலோ கஞ்சா பொட்டலங்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.



கோவை: சூலூர் அடுத்த காங்கேயம் பாளையத்தில் தங்கி கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக வடமாநில தொழிலாளி ஒருவரை சூலூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

பீகார் மாநிலம் முசாபர் பூர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திர சகானி என்பவரது மகன் சிவ்குமார் சகானி (35). இவர் தற்போது காங்கேயம் பாளையம் மெத்தை வீடு வீதியில் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த ஏழு வருடங்களாக காங்கேயம் பாளையத்தில் தங்கி கட்டிட வேலை செய்து வருவதாக தெரிகிறது.

இந்நிலையில் காங்கேயம் பாளையத்தில் சிவ்குமார் சஹானி கஞ்சா விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு கிடைத்தது. இதனையடுத்து சிறப்பு உதவி ஆய்வாளர் குப்புராஜ் தலைமையிலான போலீசார் காங்கேயம் பாளையத்தில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது சிவ்குமார் சகானி காங்கேயம் பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட போது கையும் களவுமாக பிடிபட்டார்.



அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் விற்பனைக்காக மறைத்து வைத்திருந்த 2 கிலோ கஞ்சாவை மறைவிடத்திலிருந்து பறிமுதல் செய்தனர்.



இது குறித்து சூலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சிவகுமார் சகானியை கைது செய்தனர். மேலும் சூலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் பல்வேறு மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 17, 2026 அன்று வார்டு கவுன்சி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆனைமலை ஆழியாறு அணையில் 65.45 அடியாகவும், பொள்ளாச்சி பரம்பிக்குளம் அணையில் 5...

கோவையில் ரோட்டராக்ட் கிளப் ஆஃப் கோவை நைட்ஸ் சார்பில் ARENA ஸ்போர்ட்ஸ் மீட்

கோவை வெங்கிட்டாபுரம் பகுதியில் உள்ள மாநகராட்சி கமல்நாதன் நினைவு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், தேசிய விளையாட்டு தினத்தை மு...

கோவை வார்டுகள் 12, 13-ல் வளர்ச்சிப் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.12 மற்றும் 13க்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறவுள்ள வளர்ச்சித் திட்டப் பணிகள் தொட...

காணியாளம்பாளையம் MIRA HOMES பகுதியில் ஈக்கள் தொல்லை: உடனடி நடவடிக்கை கோரி மனு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா கக்கடவு ஊராட்சிக்கு உட்பட்ட காணியாளம்பாளையம் MIRA HOMES DTCP அப்ரூவல் வீட்டுமனை பகுதி...

இடையர்பாளையத்தில் காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு கூட்டம்

கோவை மாநகர் மாவட்டம் கவுண்டம்பாளையம் சர்க்கிள் கமிட்டி சார்பாக இந்திய தேசிய காங்கிரஸ் மறு சீரமைப்பு இயக்கத்தின் எஸ் எஸ்...