சுந்தராபுரம் அருகே விபத்தில் சிக்கிய காரில் மூட்டை மூட்டையாக குட்கா பறிமுதல் - பரபரப்பு!

கோவை - பொள்ளாச்சி நெடுஞ்சாலையில் கோவை நோக்கி சென்ற கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே இருந்த மின் கம்பத்தின் மீது மோதி விபத்திற்குள்ளானது. விபத்தில் சிக்கிய நபர்கள் தப்பிச்சென்ற நிலையில், காரில் இருந்து மூட்டை மூட்டையாக குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: சுந்தராபுரம் அருகே விபத்தில் சிக்கிய காரில் மூட்டை மூட்டையாக குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



கோவை - பொள்ளாச்சி நெடுஞ்சாலையில், பொள்ளாச்சியில் இருந்து கோவை நோக்கி வந்த கார் ஒன்று, இன்று காலை 8 மணியளவில் சுந்தராபுரம் அருகே காந்திநகர் பகுதிக்கு வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுவே இருந்த மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.



இதையடுத்து காரில் வந்த இருவர் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.



அப்போது அவ்வழியாக சென்ற மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த சுந்தராபுரம் போலீசார் காரை திறந்து பார்த்தபோது உள்ளே மூட்டை மூட்டையாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்தது தெரியவந்தது.



இதையடுத்து உள்ளே இருந்த குட்கா பொருட்களை வேறு ஒரு வாகனத்தின் ஏற்றி போலீசார் அங்கிருந்து எடுத்துச் சென்றனர். இதை தொடர்ந்து பொக்லைன் மூலம் விபத்தில் சிக்கிய கார் மீட்கப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் காரை ஓட்டி வந்த நபர்கள் யார்? எங்கிருந்து குட்கா கடத்திவரப்பட்டது என்பது குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...