வால்பாறை அரசு மருத்துவமனையில் மாவட்ட துணை இயக்குனர் திடீர் ஆய்வு!

வால்பாறை அரசு மருத்துவமனையில் சில மாதங்களுக்கு முன்பு நோயாளியை ஏற்றி வந்த ஆம்புலன்ஸ் வாகனம் விபத்திற்குள்ளான நிலையில், மருத்துவமனை மற்றும் ஆம்புலன் வாகனங்களின் செயல்பாடுகள் குறித்து மண்டல துணை இயக்குநர் டாக்டர் மீரா ஆய்வு மேற்கொண்டார்.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அரசு மருத்துவமனையில் மாவட்ட துணை இயக்குனர் டாக்டர் மீரா ஆய்வு மேற்கொண்டார்.

வால்பாறை பகுதியில் அரசு மருத்துவமனை பல ஆண்டுகாலமாக இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில் பிரசவம் மற்றும் பொது சிகிச்சையை பொதுமக்கள் பெற்று வருகின்றனர். இந்நிலையில், மருத்துவமனையின் செயல்பாடுகள் குறித்து மண்டல துணை இயக்குநர் டாக்டர் மீரா ஆய்வு மேற்கொண்டார்.

சில மாதங்களுக்கு முன்பு நோயாளியை 108 வாகனத்தில் அழைத்து வந்து மருத்துவமனையில் சேர்ப்பதற்கு மருத்துவமனை வாயிலில் வாகனத்தை நிறுத்தியதில் வாகனம் பின்னோக்கி இயங்கி விபத்து ஏற்பட்டு சுமார் 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து 108 வாகன ஓட்டுனரும் நோயாளியும் விபத்தில் சிக்கினர்.

இதை தொடர்ந்து மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவு வாயிலின் முன்பு 108 வாகனம் நிறுத்துவதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டது.



108 வாகனம் வந்து நோயாளியை இறக்கி விடுவதை சோதனை மூலம் ஆய்வு செய்தனர்.

இதை தொடர்ந்து 108 வாகன மேலாளரும் 108 வாகனம் ஓட்டுனர்கள் ஆயிவில் இருந்தனர். தற்போது மருத்துவமனையில் புதிதாக கட்டப்பட்டு வரும் மருத்துவமனை கட்டிடங்களை ஆய்வு செய்தார்.



ஆய்வின் போது வால்பாறை நகர மன்ற துணைத் தலைவர் செந்தில்குமார் மருத்துவமனை கட்டிடங்களுக்கு பாதுகாப்பு கூரை அமைக்க வேண்டும். எக்ஸ்ரே, ரத்த வங்கி, சமையலர், மருத்துவமனை காவலர் எலெக்ட்ரிசியன் மருத்துவமனைக்கு பணியாளர்கள் தேவை என்று மண்டல துணை இயக்குனரிடம் தெரிவித்தார்.

அதற்கு விரைவில் நடவடிக்கை எடுப்பதாக இயக்குனர் தெரிவித்தார். இந்த நிகழ்வில் வால்பாறை மருத்துவர் மருத்துவர்கள் கட்டிட ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...