தாராபுரம் பகுதியில் திருட்டில் ஈடுபட்ட மேலும் ஒரு டவுசர் கொள்ளையன் கைது!

தாராபுரம் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு பல்வேறு திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட 2 டவுசர் கொள்ளையர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், 3வது கொள்ளையனான தேனியை சேர்ந்த ரமேஷ் என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.



திருப்பூர்: தாராபுரம் அருகே திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்த மேலும் ஒரு டவுசர் கொள்ளையனை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

தாராபுரம் பகுதியில் டவுசர் கொள்ளையர்கள் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட ஆசாமிகளை தேடி வந்தனர்.

இதையடுத்து குற்றவாளிகளை பிடிக்க காவல் ஆய்வாளர் மணிகண்டன் தலைமையில், துணை ஆய்வாளர் கருப்புசாமி, காவலர்கள் கலைச்செல்வன், வேலுமணி கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த தனிப்படை போலீசார் தாராபுரம் பகுதியில் திருடிய டவுசர் கொள்ளையர்களை தேடி வந்த நிலையில், தேனி மாவட்டம் ஜங்கிள்பட்டியை சேர்ந்த முருகேசன் என்ற மூசா (52), தேனி காமாட்சிபுரம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த அர்ஜுனன் (28) ஆகியோரை கைது செய்தனர்.



இந்த வழக்கில் தொடர்புடைய தேனி மாவட்டம் குப்பிய நாயக்கன்பட்டி தென்றல் நகர் பகுதியை சேர்ந்த டவுசர் கொள்ளையன் ரமேஷ் (45) என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து 2 சவரன் நகைகள் மீட்கப்பட்டன.

இவர் மீது மதுரை மாவட்டம் தல்லாகுளம் காவல் நிலையத்தில் ஒரு கொலை மற்றும் திருட்டு வழக்கும், தேனி மாவட்டம் ஓடைப்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கும் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...