லண்டனில் உயிரிழந்த கோவை மாணவரின் குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அண்ணாமலை!

லண்டனில் உயிரிழந்த கோவையை சேர்ந்த மாணவர் ஜீவநாத் இல்லத்திற்கு சென்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவரது படத்திற்கு அஞ்சலி செலுத்தி குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார். மேலும் அங்கு வந்த மாற்றுதிறனாளி ஒருவருக்கு மாதம் ரூ.3,000 அனுப்புவதாக அண்ணாமலை உறுதியளித்தார்.



கோவை: லண்டனில் உயிரிழந்த கோவை மாணவர் ஜீவநாத் குடும்பத்தினரை பாஜக தலைவர் அண்ணாமலை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

கோவை மாவட்டம் நரசிம்மநாயக்கன்பாளையம் அடுத்த தென்றல் நகர் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மகன் ஜீவநாத். ஜீவநாத் கடந்தாண்டு இங்கிலாந்து நாட்டில் உள்ள ஆஸ்டன் பல்கலைக்கழகத்தில் PG படிப்புக்காக சென்றுள்ளார்.

இந்நிலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு ஜீவநாத் இங்கிலாந்து நாட்டின் பர்மிங்காம் கால்வாயில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த தகவல் ஜீவநாத் பெற்றோர்களுக்கு தெரிய வந்ததை அடுத்து சம்பவத்தை கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் ஜீவ்நாத் எவ்வாறு உயிரிழந்தார் என்பது குறித்து இன்னும் முறையான தகவல் லண்டன் போலீசார் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது. மாணவர் ஜீவநாத் குளிக்க சென்ற போது விபத்து நேரிட்டதா அல்லது வேறு ஏதாவது காரணமா என எந்த தகவலும் முறையாக வரவில்லை.

இதைத்தொடர்ந்து ஜீவநாத் உடல் கோவை கொண்டு வரப்பட்டு பெற்றோர்கள் உறவினர்கள் நண்பர்கள் இறுதிச் சடங்கு செய்யப்பட்டது. இந்த நிலையில் நேற்றைய தினம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நரசிம்மநாயக்கன்பா பகுதியில் உள்ள கட்சி நிர்வாகியின் கல்யாண நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்.



அதனை தொடர்ந்து லண்டனில் இறந்த ஜீவநாத் சிவகுமார் வீட்டிற்கு நேரடியாக வந்து மலரஞ்சலி செலுத்தி அவர்களது குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார்.

அப்பொழுது மாற்றுத்திறனாளி ஒருவர் தான் பெரிய நாயக்கன்பாளையம் பகுதியில் தோட்ட காவலாளியாக இருப்பதாகவும் இன்று உங்களை சந்திக்க வரும்போது என்னை வேலையை விட்டு நீக்கி விட்டார்கள் என்று கூறினார்.



இதனை தொடர்ந்து அந்த மாற்றுத்திறனாளியிடம் மாதம் 3000 ரூபாய் பாஜக கட்சி சார்பாக உங்களுக்கு நான் தருவதாக என்று உறுதிமொழி கொடுத்தார்.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...